Pages

Monday, June 25, 2012

உயிர் 2.0

இக்கதையின் முதல் பகுதி இங்கே.

ரயில் நிலைய பிளாட்பாரத்தில்,முருகனும் கணபதியும் , இருவரும் ரயில்வே போலிஸ். 

"முருகா , அது பிக்பாக்கெட் மணி மாதிரியில்ல இருக்கு.."
"ஆமாயா அவனேதான்,சீக்கிரம் வா புடிப்போம் "

இவர்கள் கவனித்ததை பார்த்த மணி, ரயில் பாதையிலேயே  ஓட துவங்கினான் . சிறிது தூரம் ஓடிய  பின் ஒரு ரயில் வருவதை கவனிக்காமல் திடீரென வேறு ஒரு Track-க்கு மாற நினைத்து அந்த ரயிலில் அடிப்பட்டு சிதைந்து போனான்.

துரத்தி வந்த இருவருக்கும்  அதிர்ச்சி, இது வெளிய தெரிந்தால் தாங்கள் துரத்தி வந்துதான் அவன் இறந்தான் என தெரிந்து பிரச்சனை ஆகிவி டும் என பயந்து வேகமாக திரும்பி விட்டனர்.

சிறிது நேரத்தில் தகவல் ரயில்வே போலிஸ் நிலையத்திற்கு வந்தது.

"சார் சீக்ரமா கையெழுத்து போடுங்க, ஒரு கேஸ் வந்துருக்கு போகணும் ... "

தன்  தாயே தன் சாவை தடுத்து நிறுத்தியதாக நினைத்து கலங்கி நின்ற ராம் மீண்டும் நிகழ்காலம் வந்தான்.

அவன் காப்பாற்றிய அந்த குழந்தையின் தாய்  ராமிடம்  நன்றி தெரிவித்து அவன் அட்ரசை வாங்கி கொண்டு அவர்கள் அட்ரசையும் கொடுத்தனர். இவனோ  போலியான ஒரு அட்ரஸ்தான் தந்தான்.

"மனிதனுக்கு உயிர் கொடுக்க மட்டுமே உரிமை இருக்கிறது, தன்  தாய் தந்த  உயிரை எடுக்க உரிமை இல்லை"  என்பதை உணர்ந்தான். இனி வீட்டிற்கு போக மனமில்லை, சாகவும் துணியவில்லை.

அடுத்த நாள் ...

ராம், தான் ஏற்கனவே வேலை செய்த கம்பெனியின் முதலாளியிடம் சென்று நடந்தவை எல்லாம் சொல்லி மீண்டும் தனக்கு வேலை தரும்படி கேட்டான் . ஆனால் இதே ஊர்  வேண்டாம் வேறு ஊரில்  வேலை தருமாறு கேட்டுக்கொண்டான். அங்கே சென்று யாருக்கும் தெரியாமல் வாழப்போவதாக  தெரிவித்தான்.

ஏற்கனவே அந்த முதலாளிக்கு இவன் மேல் நல்ல மதிப்பு இருந்ததால் , ஓசூர் கிளையில் சேருமாறும், அப்படியே புதிதாய் பெங்களூரில் தொடங்கப்போகும் கிளையின் பணிகளையும் கவனிக்கும்படி சொன்னார். சில ஆயிரங்களையும் தந்து, அந்த கிளையின் மேனேஜரிடமும் பேசினார். ராம், இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என கூறினான், அவரும் அவன் நிலை உணர்ந்து சரி என்றார்.

ராம், ஓசூர் வந்த இரண்டாவது நாளில் முதலாளி போன் செய்து அந்த அதிர்ச்சி செய்தியை சொன்னார். அவனால் நம்பவே முடியவில்லை, இருந்தாலும் இப்பொழுது அங்கே வருவது சரி இல்லை என்றும் இன்னும் மூன்று வாரம் கழித்து  வருவதே சிறந்தது என்று கூறினான், அவரும் சரி என்று ஒத்துக்கொண்டார்.

மூன்று வாரம் ஓடியது ....
ராம் அந்த இரவு நேரத்தில் முதலளில்யை சந்தித்தான் ...

"மொதல்ல, நீ எதுக்கு சாகனும்னு முடிவு பண்ணின"
"அன்னைக்கு நான் உயிரை விட்டா கூட கவலை பட யாரும் இல்லைன்னு இருந்த போது, என் உயிரை பத்தி எனக்கு எந்த கவலையும் வரல சார்"
 "இப்போ பாரு என்னென்னவோ நடந்துடுச்சு ... இவ்ளோ கொழப்பம் பாரு"
"ஆனா நான் தெளிவாகிட்டேன் சார்"
"என்ன சொல்ற "

"நீங்க தகவல் சொன்ன அந்த வாரமே நான் இங்க திரும்ப வந்து அந்த ரெயில்வே  போலிஸ் கிட்ட ரகிசயமா உண்மையா எல்லாம் சொல்லி நடந்தத  விசாரிச்சுட்டேன்"
"என்ன நடத்துச்சு?"
" சார்... நான் ட்ரைன்ல இருந்து குதிக்க நெனச்சப்போ ஒருத்தர் என்னோட பார்ச திருடிருக்கார், அவர் போலிஸ் கிட்ட மாட்டாம  இருக்க தப்பிச்சு போகும் போது ட்ரைன்ல அடிப்பட்டு சிதைஞ்சு இறந்துட்டார். அவர் கிட்ட இருந்த பர்ஸ் பாத்துட்டு எங்க வீட்டுக்கு தகவல் சொல்லிருக்காங்க. நானும் SMS  அனுப்பினதால அவங்களும் நம்பிட்டாங்க.
எங்க மாமனார் குடும்ப மானம் போய்டும்னு பணம் குடுத்து  தற்கொல விஷயத்த மறைச்சு, நானும் மைதிலியும் ட்ரைன்ல போகும்போது விழுந்து இறந்துடதா கதைய மாத்திட்டார்."
"அப்போ விவாகரத்து ?"
"அதுவும் பிராடுதான். எங்க என்னோட கடன் தொல்லை எல்லாம் அவங்களுக்கு வந்துடுமோன்னு பயந்து. ஏற்கனவே எனக்கும் அவளுக்கு விவாகரத்து அப்ளை பண்ணியாச்சுன்னு சொல்லிட்டாங்க, அதுக்கான ரெக்கார்ட் எல்லாம் போலியா ரெடி பண்ணிட்டாங்க."
"அவ்வளவு கொடுரமனவங்களா...  "
"அவங்களும் மனுஷங்கதான சார்  "
"இனி"
"சார் இப்போ என் பிரண்டு மூலமா வேற பேர்ல ஒரு லைசன்சு,பாஸ்போர்ட் எல்லாம் வாங்கிட்டேன். எந்த லஞ்சத்த வெச்சு அவங்க நான் செத்துட்டதா செஞ்சாங்களோ, அதே லஞ்சத வெச்சு நான் புதுசா பொறந்துட்டேன், சிவாஜி படத்துல வர்ற ரஜினி மாதிரி சார்."

"வாவ் கிரேட்"
"அந்த பிக் பாக்கட் பேரு மணி , 29 வயசு ஆகுது". 29 வருடங்களுக்கு முன்னாள் இறந்த அவன் தந்தையின் பெயர்.

"இதுல அதிசயம் என்னான்னா.... என்னோட உயிரை காப்பதினது எங்க அம்மான்னா... எனக்காக உயிரை விட்டது எங்கப்பா சார் ...

மனுஷனுக்கு உயிருங்கறது ஒன்னு இல்ல சார் ... ஒவ்வொரு உறவும் ஒரு உயிர். ஒண்ணொண்ணா பிரியுறப்போ ஒரு உயிர் போகுது. கடைசி உறவு போனதுமே அவன் வெறும் பொணம்தான்.

அப்படி ஒரு பொணமாத்தான் நான் சாக போனேன்... ஆனா விதி என்ன சாகவிடல...

இனியும் நான் சாகக்கூடாது, நான் வாழனும்.... ஒரு குழந்தைய தத்தெடுத்து வளரக்க போறேன் சார், புது உறவு ... புது உயிர் ... அந்த உயிருக்ககாவே நான் வாழப்போறேன் சார்"

"You are great Ram ... Sorry.... You are great Jeeva" என்றார் முதலாளி...

1 comment:

  1. Nice story - Positive approach to life ... @sweetsudha1

    ReplyDelete