Pages

Tuesday, January 31, 2012

பாதை தேடி ஒரு பயணம்

இதுவரைக்கும் இப்படி ஆனதே இல்ல..  எப்பவும் நாங்க எல்லாரும் சேந்துதான் போவோம் வருவோம்.. ஆனா திடீர்னு ஒரு புயல் மாதிரி...
அப்பறம் என்ன ஆச்சுன்னே தெரியல, இப்ப நான் மட்டும் தனியா இப்படி அலையுறேன். அனேகமா நான் மயங்கிட்டேன்னு நெனைக்கறேன் இல்லைனா மயக்கத்லையே இங்க நடத்து வந்துருப்பேன். இந்த எடமே எனக்கு புதுசா இருக்கு... இதெல்லாம் நான் பாத்ததே இல்ல...

இருங்க.. இருங்க.. எங்கயும் போகாதீங்க... தனியா இருக்க பயமா இருக்கு. நான் மத்தவங்கள கண்டுபுடிக்கற வரைக்கும் என் கூட இருங்க... ப்ளீஸ்...

இந்த எடம் ஒரே இருட்டா இருக்கு, எதோ பழைய புக்கு வாசனை எல்லாம் வருது... இன்னும் எவ்ளோ தூரம் இப்படி இருட்டுலே நடக்கனும்னு தெரியல... எங்க ஆளுங்க யாரவது ஒருத்தர பாத்தா கூட அவங்க கூடவே நான் வீட்டுக்கு போய்டுவேன்.

வெளிச்சமே இல்ல, என்ன எடம்னு கூட தெரியல... ராத்திரி ஆகிடுச்சோ. வீட்ல எல்லாரும் நான் இன்னும் வரலைன்னு கவலையா இருப்பங்க.. அப்பாவும் அண்ணனும் இந்நேரம் என்ன தேடிட்டு இருப்பாங்க.. பாவம் எல்லாரும்... ம்ம்ம்.. நானும்தான்... ஆனா எப்படியும் காலைலக்குள்ள வீட்டுக்கு போய்டுவேன்னு நெனைக்குறேன்... நாமலே செம கருப்பு, இந்த இருட்டுல அவங்க எப்படி என்ன கண்டுபுடிப்பாங்க....

அட அங்க ஏதோ வெளிச்சமா இருக்கு... கூடவே வாங்க.. வேகமா ஓடலாம்.. அடடா சூரியவெளிச்சம், எப்படியோ இருட்டான எடத்துல இருந்து தப்பிச்சிட்டோம்.. ஆனா என் கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் யாரையுமே காணமே.. இன்னும் கொஞ்ச தூரம் போயி பாக்கலாம்...

ரொம்ப நேரமா அலையுறேன் ஒருத்தரும் கண்ணுல படல... அவங்கள விட்டு ரொம்ப தூரமா வந்துட்டனா.. அவ்ளோதானா.. எனக்கு அழுகையே வர்ற மாதிரி இருக்கே...

அங்க ஒரு மேடு மாதிரி தெரியுது அதுக்கு அந்த பக்கம் போயி பாக்கலாம் வாங்க... கொஞ்சம் தூரமா இருக்கு வேகமா ஓடினா சீக்கிரமா போய்டலாம்... இந்த குண்டு ஒடம்ப வெச்சிக்கிட்டு ஓடுறதே கஷ்டம்தான், அதனால் நீங்களே 'ஓட ஓட ஓட தூரம் கொறயல' பாட்டு பாடுங்க, சிச்சுவேசனுக்கு கரெக்டா இருக்கும்.

ஹப்பாடா வந்தாச்சு ... எங்க....

ஹே.. தோ... அங்க... அதோ அங்கதான் எல்லாரும் போறாங்க பாருங்க...
ஹையா... கண்டுபுடிச்சிட்டேன்...ஹேய்ய்ய்யய்ய்ய்.... நான் வர்றேன்.. டாட்டா...

டேய்... டேய்... நில்லுங்கடா.. நானும் வரேண்டா...

** THE END **

ரொம்ப நன்றிங்க, நம்ம ஹீரோ, கட்டெறும்பு, அவங்க கூட்டத்தோட சேருற வரைக்கு கூட வந்ததுக்கு. இந்த வீட்டுக்காரம்மாதான் ஹிட் அடிச்சி எல்லாரையும் கொல்ல பாத்துச்சி, ஆனா நம்ம ஹீரோ தப்பிச்சுட்டார்..
இந்நேரம் அவர் குடும்பத்தோட.. லா லாலா லாலா லலலல லா லா ...

Monday, January 30, 2012

தவளகுப்பம்

கடலூர் பஸ் ஸ்டான்ட். பஸ்ல அதிகம் கூட்டம் இல்ல. மூனாளு சீட்ல இவன் மட்டும் தனியா ஜன்னலோரம் உட்காந்தான். நாளைக்கு காலைல பாண்டில ஒரு இன்டர்வியூ, நைட்டே போயி ஜீவா ரூம்ல தங்கிட்டு காலைல நேரமா ரெடியாகி போகணும்.

பஸ், ராஜீவ் காந்தி காலேஜ தாண்டுனதும் ஒரு பெரியவர் இவன் சீட்டுல வந்து உக்காந்தாரு. ஆனா இவன் கண்டுக்கல.லேசா கலைஞ்ச தலை, நாலு நாள் வெள்ளை தாடி,ஒல்லியான ஒடம்பு, எப்படியும் அறுபது வயசிருக்கும்.

அந்த பெரியவர், கண்டக்டர்ட்ட, "தவளகுப்பம்". கண்டக்டர் கொஞ்சம் கடுப்பா, "ஆறு ரூபா சில்லறையை குடு". இவர் பத்து ருபாய் நோட்டை நீட்டிகிட்டே, "சில்லறை இல்லப்பா, வேணும்னா ஒரு ரூபா இருக்கு"-னு சொல்ல, அதுக்கு கண்டக்டர் எதோ சொல்ல, இவன் ஹெட்போனை எடுத்து காதுல மாட்டிக்கிட்டான்.. ஆனா எதோ பாட்டு கேட்க பிடிக்கல, கொஞ்ச நேரத்துல கலட்டிட்டான்.

இப்போ அந்த பெரியவர் எதோ புலம்பிகிட்டிருந்தாரு.இவன் பாக்குறது தெரிஞ்ச பெரியவர், இவன்ட்ட திரும்பி,
"சார் மணி என்ன"
"9.30"
"சார் இவன்லாம் பெரிய வேலைல இருக்கேன் நெனப்புல இப்படி பேசுறான், நான் படிக்கலதான் அதுக்காக இப்படியா பேசுறது.."
இவன் ஆர்வமே இல்லாம தலையாட்டுனான்....
அவர் இன்னும் எதோ சொன்னாரு, ஆனா இவன் காதுல விழவே இல்ல, இருந்தாலும் ஆமாங்கற மாதிரி தலையாட்டுனான்.அவர் கண்டக்டரை பத்திதான் எதோ சொல்றார்னு மட்டும் புரிஞ்சுது..

"இதெல்லாம் நான் பேரபுள்ளைங்களுக்கு வாங்கிட்டு போறேன் "
அவர் காட்டுன பிளாஸ்டிக் கவரில் ஒரு பொட்டலம் மிட்சர் ரெண்டு பாக்கெட் மில்க் பிக்கிஸ் பிஸ்கட்டும் தெரிஞ்சுது.
"இதே நூறு ரூபா ஆச்சு"
"இப்பதான் பெரிய மவ வூட்லருந்து வறேன், இந்தா தவளகுப்பத்துலதான் சின்ன மவ வூடு. பெரியவ காலைலதான் போகணும்னா... அங்க படுக்க கூட எடமில்ல எப்புடி இருக்கறதுன்னு நானே கெளம்பிட்டேன். மாப்ள காலேஜ் பக்கத்துல பொட்டிகடை வெச்சிருக்காரு, ஆனா வீடு வசதின்னு ஒன்னும் பெருசா பண்ணிக்கள. அந்த புள்ளைங்களும் தாத்தா தாத்தான்னு கால சுத்தி ஒண்ணும் கழுத்த சுத்தி ஒண்ணும் கெடக்குங்க, என்ன பண்ண."

"சின்ன மவளும் மாப்ளையும் தோட்டம் வச்சினு ஓட்டிட்டுருக்காங்க. எனக்கும் தோட்டமெல்லாம் இருக்கு சார், மல்லாட்ட பயிறுதான் போட்ருந்தேன், இந்த மழைல எல்லாம் போய்டுச்சு.. ஆத்தாக்காரி அழுதுட்டே இருந்தா அதான் பொங்கலுக்கு புள்ள வூட்டுக்கு போடின்னு அனுப்பிச்சிட்டேன், இங்க சின்ன மவ வூட்லதான் இருக்கா."

கண்டக்டர் இப்போ அவர தாண்டி போறத பாத்துட்டு,
"சார் நீங்க என்ன வொர்க் செய்றீங்க"
"கடலூர்ல வேலைக்கு இருக்கேன்"
"அதில்ல, என்ன சம்பளம் வரும், ஒரு நாளைக்கு.. இல்ல ஒரு மாசத்துக்கு "
"பத்தாயிரம் ரூபா "
"இவன்லாம் எவ்வளவு சம்பளம் வாங்குவான், என் காட்ல கூலி குடுக்கற காசு சார், சில்லறைக்கு போயி அப்பிடி பேசுறான். என் மவன் திருநவேலில எஸ்.ஐயா இருக்கான் ஒரு போன் அடிச்சா போதும், இவன் என் கால்ல உழுவான்."

"சார், நான் இப்படி கொஞ்ச அழுக்கான சட்ட போட்ருக்கன்னுதான் இப்புடி பேசுறான், மனுஷன மதிக்கணும் சார் காசு பணத்த இல்ல"
இப்போ அவர் இவனை சார்னு  சொல்றது என்னவோ மாதிரி இருந்துச்சு...
"நீங்க என்னைய சார்னெல்லாம் சொல்ல வேணாம்யா"
இவன் சொன்னத அவர் கண்டுக்கவேயில்லை...
"ஏதோ இந்த வருஷம் கொஞ்சம் கஷ்டம்... நாங்கல்லாம் மண்ண நம்பி இருக்கவங்க தம்பி".
எதோ மேல பாத்தாரு, திரும்பி இவன பாத்து...
"மனுஷங்கதான் செத்து போவாங்க... மண்ணு சாகாது தம்பி..."
அதுக்குள்ள தவளகுப்பம் வர, "சரி தம்பி வரேன்". சொல்லிக்கிட்டே அவரு எறங்க தயாரானாரு.

பத்து நிமிஷத்துல அவர் வாழ்க்கை கதையவே சொல்லிட்டு போய்ட்டாரே, வெள்ளந்தியான மனுஷன் ...
காத்துல அவன் கையில இருந்த நோட்டு பக்கம்  லேசா திரும்ப, நாளைக்கு இன்டெர்வியூக்காக 4 மணி நேரம் அவன் யோசிச்சு பதில் தயார் செஞ்சு வைச்சிருந்த கேள்வி கண்ணுலபட்டுது
"Tell me about yourself..."

[BASED ON A TRUE EXPERIENCE]

Tuesday, January 24, 2012

ஒரு முறை .. ஒரே ஒரு முறை .. [Part 2]

இடம்: Le Bonheur
நாள்: செப்டம்பர் 3, 2011

"அம்மா.. அம்மா.."

கால்கள் செருப்பை கழட்டி விட, கைகள் சாவியை ஆணியில் மாட்ட,
கண்கள் அம்மாவை தேட,  வாய் அப்பாவை திட்ட,  வேகமாய் உள்ளே வந்தால் பார்வதி.
"இந்த வண்டியில லைட்ட மாத்த சொல்லி நானும் மூணு நாளா
சொல்லிக்கிட்டு இருக்கேன். நான் இருட்டுல எங்கயாவது
உழுந்தாதான் மாத்துவாங்களா".
"நேத்தே வாங்கியாந்துட்டாங்கமா, மாத்த மறந்துருப்பாங்கன்னு நெனைக்கறேன்"
"ஓ, சரிம்மா. காலையில நானே ஞாபகப்படுத்துறேன்".
இரண்டாய் உடைந்த கொய்யாப்பழமாய்  இருந்த கன்னங்கள், தாயை கண்டதும், திரியாத பாலாய்  மாறியது.

சீரியல் சன் மியுசிக்கிற்க்கு மாறியது. "இவ வந்தாலே ஒரு சீரியலும் பாக்கமுடியாது". வசனமாவது கேட்டுகொண்டே வேலைகளை
செய்துகொண்டிருந்த  மீனாட்சி மனசுக்குள்ளேயே நினைத்து கொண்டாள்.
அந்த சேனலில் விளம்பரம் ஓடவே, அதற்குள் மற்ற அனைத்து சேனல்களுக்கும் ரிமோட் தீபாராதனை காட்டிவிட்டு மீண்டும் இதே சேனலில் வந்து நின்றது. இப்போது,
"யானை தந்தத்தின் சிலை நீயே.. ஏறும் தங்கத்தின் விலை நீயே.. காதல் வீசிய மலை நீயே.. எனை கட்டி இழுத்தாயே ..."

அதற்குள் வாய் ஏதாவது கொறிக்க நினைக்க, ஆறாம் நொடியில் பிரிட்ஜ்-ன் முன் நின்றாள்.  அங்கே ஏதும் இல்லாததால், நேத்து சுட்ட வடைஒன்றை மட்டும் கடித்து கொண்டே வந்து தொடர்ந்தாள். இப்பொழுது,
"வேறென்ன வேண்டும் உலகத்திலே.. இந்த ஜென்மம் போதும் நெஞ்சினிலே... ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்... " பாடல் ஓட, அவள் மூளையில்,
 "கண்ணாடி நீ... கண்ஜாடை நான்.. " ஒடியது. இரண்டு நாள் முன்தான் இப்படத்தை ரசித்து பார்த்தாள் .

திடீரென ஏதோ நினைவு வந்தவளாய் ...
"ஏம்மா, அத்த இன்னிக்கி வரலியா."
"சாயந்தரம்தான் வந்தாங்க, கருவேப்புல கொத்து ஓடிச்சிட்டு போனாங்களே..."
"சரிம்மா..." என கூறிக்கொண்டே தன் அறையில் நுழைந்தால் பார்வதி.
ஆனால் தினமும் அவ மண்டைய கொடயுற அதே கேள்வி இன்னைக்கும்...

"அப்போ இன்னுமா இந்த நந்தா பய மருந்து குடிக்கல...", என மனசுக்குள்ளேயே நினைத்து லேசாய் சிரித்தாள்.

[தொடரும்...]

இந்த நந்தா யாருன்னு தெரியனுமா இங்க பாருங்க - PART 1

Sunday, January 22, 2012

ஒரு முறை .. ஒரே ஒரு முறை .. [Part 1]

இடம் : நந்தாவின் அறை
நாள்: செப்டம்பர் 3, 2011

பல நாள் யோசனைக்கு பிறகு தான் அவன் இந்த முடிவுக்கு வந்தான். இந்த அறை அவனின் நவரசங்களையும் பார்த்திருக்கிறது கடந்த 
3 ஆண்டுகளாக. இன்று அதே அறை ஒரு மிகப்பெரும்  சம்பவத்தை காணவும் தயராகிக்கொண்டிருக்கிறது. அறையின் மூலையில் ஒரு டேபிள், அதில் அவன் லேப்டாப். அதன் அருகிலேயேதான் இரண்டு பாட்டில்கள். அதில் ஒரு பாட்டில் அவனுக்கு மிகவும் பிடித்த 'Whyte & Mackay'. இன்னொன்று.....

இந்த மூன்று  வருடங்களாக அவன் மட்டுமே அந்த அறையில் வசித்து வருகிறான். சில சமயம் நண்பர்கள் பார்ட்டி இவன் அறையில் அரங்கேறும். தனி அறை, அதுவும் ஐந்தாவது மாடி என்னும் போது யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்... அவன் அறையின் ஜன்னலை திறந்து வைத்தால் வெறும் சோடிய வெளிச்சமே தெரியும். ஆம் அருகில் எந்த உயர்ந்த கட்டிடமும் இல்லை, அதனாலேயே இவனுக்கு இந்த அறை பிடித்திருந்தது. தனிமையில் இரவில் காற்று  சுழன்றடிக்க எதுவுமே தெரியாமல் உறங்கியிருக்கிறான், போதையில். இன்றும், கடைசி முறையாக தயாரகிக்கொண்டிருந்தான்...

அவன் அறையில் இருந்த பாட்டிலில் இன்னொன்று, அவனுடைய சிறு வயதில் அவர்கள் வயக்காட்டில் இருந்த பருத்தி செடிக்கு அடிக்கும் மருந்துதான். அதன் பெயரும் மனமும் அவனுக்கு மிகவும் பரிச்சயம். அதன் குணம், பூச்சி கொல்லி மட்டும் அல்ல, அவர்கள் வயலில்  வேலை செய்த மாரியம்மாளின் மகளின் உயிரையும் சேர்த்தே கொன்றது அது. அது இந்த மாநகரில் கிடைக்காது என்று தெரியும் அவனுக்கு. அதனாலேதான் கடைசியாய் ஊருலிருந்து வரும்பொழுது, அதுவும் அவனுடனே பயணித்தது. இப்பொழுது அவன் முன்னே, எமனாய் ....

ஒரு மூடியோ இரண்டு மூடியோ குடித்தால் வேலைக்கு ஆகாது, பாட்டில் முழுவதுமாய் குடிக்கவேண்டும்.அதனாலதான் அவனுக்கு இன்னொரு துணை பாட்டில் தேவைப்பட்டது.எல்லாம் தயார் இப்போ, மனசுல இருந்ததெல்லாம் கொட்டி ஒரு லெட்டர் கூட எழுதியாச்சு. இல்ல ... கடைசியா ஒரு வரி சேர்க்க ஆசைப்பட்டான், கடைசி ஆசையோ என எண்ணிக்கொண்டே அதை எழுதி முடித்தான் :

"சாவதற்கு தைரியம் தேவையில்லை, நிகழ்கால வெறுப்பும் எதிர்கால பயமும் போதும்."

[தொடரும்...]

Movies of 2011

Movies of 2011: (I have seen)
Tamil movies - 46
Dubbed movies - 3
English movies - 2

Fav Actor/Actress of the 2011:


Ajith
Dhanush
Anjali


















Cute Heroine of 2011








Reshmi menon (Theneer Viduthi)

Fav Comedy of 2011

 "புடிச்சு போடுங்க சார் அவன... வக்கீலையே கொல பண்ணுவானாம். டீ காபி டீ காபி ..... "

My fav characters of 2011:
 












K.P.Karuppu,
Cable Raja,
Kumbudren Sami,
Nila,
Vinayak Mahadevan,
Kathiresan

My Top rated movies of 2011:



மங்காத்தா,
எங்கேயும் எப்போதும்,
மயக்கம் என்ன

Five Stars [*****] : மங்காத்தா,எங்கேயும் எப்போதும், மயக்கம் என்ன

Four Start [****] : ஆடுகளம், குள்ளநரி கூட்டம், கோ, யுத்தம் செய், பயணம்

Three Stars [***] (2/2) : வித்தகன், வேலாயுதம், மௌனகுரு, 180 , காஞ்சனா, வந்தான் வென்றான், கண்டேன்.

Three Stars [***] (1/2) : சிறுத்தை, காவலன், வானம், அழகர்சாமியின் குதிரை, அவன் இவன், வேங்கை, தெய்வதிருமகள், போட்ட போட்டி, முரண், வெடி

Two Stars [**] : வாகை சூட வா, 7-ம் அறிவு, போராளி, ராஜபாட்டை, சதுரங்கம், தம்பி வேட்டோதி சுந்தரம், உதயன், வெப்பம்.

One Star [*] : தூங்காநகரம், எத்தன், ஒஸ்தி, மாப்பிள்ளை, வேலூர் மாவட்டம், மம்பட்டியான், பதினாறு, சிங்கம் புலி

Can't rate these movies:
தேநீர் விடுதி,
முதல் இடம்,
இளைஞன்,
சட்டப்படி குற்றம்

Came out at half of the movie : தூங்காநகரம் & தேநீர் விடுதி

Only movie which gave me big bulb against expectation :மாப்பிள்ளை.


Winner of Fancy Dress competition, 2011: Simbu (Osthe)

Mokka Actor/Actress of the year, 2011: Mahat and Shruti






My Top 10 Songs of 2011:

ஒத்த சொல்லால (ஆடுகளம்)
விழிகளிலே விழிகளிலே (குள்ளநரி கூட்டம்)
நங்கை நிலாவின் தங்கை (எங்கேயும் காதல் )
ராசாத்தி போல (அவன் இவன்)
மச்சி ஓபன் தி பாட்டில் (மங்காத்தா)
சொட்ட சொட்ட (எங்கேயும் எப்போதும்)
காஞ்சனமாலா (வந்தான் வென்றான்)
யம்மா யம்மா (7-ம் அறிவு )
இப்படி மழையடித்தால் (வெடி)
நான் சொன்னதும் (மயக்கம் என்ன)

Fav theme music of the year, 2011:

 'A Love blossoms' (Aadukalam)

Expected lot on a Song and got a big bulb on screen: 

இது எங்க பல்லேலக்க (மங்காத்தா)


My Fav Albums of 2011:

அவன் இவன்
ஆடுகளம்
எங்கேயும் எப்போதும்
மங்காத்தா
மயக்கம் என்ன
வெடி
வேலாயுதம்

Fav Verse of 2011 

"ஒரு குட்டி பூனை போலே காதல் எட்டி பாக்குதே"
"என் பாட்டு வேறதான் எந்நாளும் என் ரூட்டு வேறதான், என்னோட வேலைதான் என்னான்னு ஊர் பேசும் நாளைதான்"