Pages

Friday, July 27, 2012

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங் ...

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங் ...
"ஹலோ பூரி இருக்காங்களா "
"இல்லையே "
"இல்லையா ... "
"டீ சாப்ட போயிருக்காங்க "
"ஒ... சரி சரி .. நீங்க..."
"நான் மசால் தோசை "
"எப்ப வருவாங்க"
"இன்னும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கால் பண்ணுங்க"
"சரிங்க"
"நீங்க யாரு பேசறது... "
"நான் கார வடை ..."
"சரிங்க.... வந்தா நான் சொல்றேன்..."

*******

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங் ...
"ஹலோ கார வடையா "
"ஆமாங்க"
"நான்தான் பூரி பேசுறேன்"
"நீங்க ஸ்ட்ரைக் பண்ணனும்...  நாங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்ண போறோம்..."
"என்னது  ..."
"ஆமாங்க, உங்களாலதான் எங்களுக்கு பிரச்சனையே "
"எங்களால உங்களுக்கு என்ன பிரச்சனை?"
"உங்கள பொறிச்ச எண்ணைலதான் எங்களையும் பொறிக்கறாங்க.. அது எங்களுக்கு புடிக்கல.. நாங்க ரொம்ப கருப்பாகிடுறோம் ...."
"போங்கடா லூசுங்களா "
..... டொப் .....
"என்னாச்சு பூரி "
"பாருங்க மசால் தோசை அண்ணே ... இந்த கார வடைங்க எங்கள ஸ்ட்ரைக் பண்ண கூப்புடுறாங்க... "
"எதுக்கு ?"
"எதோ, எங்கள பொறிச்ச எண்ணைல அவங்களையும்  பொறிக்கறாங்களாம் , அது புடிக்கலயாம் அதான் ஸ்ட்ரைக் பண்ண போறாங்களாம்"
"அட பாவிங்களா  , அப்படி பாத்தா , வடை சுட்ட  எண்ணைலதான் எங்களையே வேக வெக்கறாங்க.. நாங்க எங்க போறது ..."

*******

"காரவடை தோழர்களே .... பூரி நமது போராட்டத்திற்கு  ஒத்துழைப்பு தரவில்லை.. ஆனாலும் நாம் நமது போராட்டத்தை  துவக்குவோம் ...
இனி பூரி பொறித்த  எண்ணையில்  நம்மை பொறித்தால் நாம் வேகக்கூடாது ... எவ்வளவு  சூடக்கினாலும் நாம் தளரக்கூடாது ...."

*******

"ஐயா ... பருப்பு சரி இல்லைன்னு நெனைக்கறேன் வடை வேகவே மாட்டேங்குது..."
"அதெப்புடி... அதே பருப்புதாண்டா ..."
"எண்ணைல ஏதாவது பிரச்சனையா இருக்கும் ... விடு வேற எண்ணைல  போட்டுக்கலாம்... இப்போதைக்கு அரை வேக்காட்டுலையே எடுத்துடு ... கஸ்டமர் எல்லாம் வர்ற நேரம் ஆகிடுச்சு ..."

*******

"காரவடை தோழர்களே.... நமது போராட்டம் வெற்றி பெரும் தருணத்தை எட்டி விட்டது ...."
*******

"டேய் நேத்து வடை வேகலைன்னு சொன்னியே.... இந்தா... இது பக்கத்து கடைல மீன் பொறிச்ச எண்ணை ... இதுல நல்ல வேகுமாம் ... சீப்பா வாங்கியாந்துட்டேன்..."

*******

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங்...
"ஹலோ மீன்  இருக்கான்களா ...."

  -- முற்றும் --


 நீதி : எண்ணெய் உணவுகளை தரமான கடைகளில் வாங்கிடுங்கள்.

Thursday, July 12, 2012

அலோ

"ஹலோ "
"..."
"எங்க இருக்கீங்க "
"..."
"புரியல ஒரே சத்தமா இருக்கு "
"..."
"என்னது வேலூர் கிட்டயா  சரி சரி "
"..."
"பசங்க இன்னும் வரல வர்ற நேரம்தான் "
"..."
"ஆமா வந்தான் , நான் பணத்த குடுத்துட்டேன் "
"..."
"ஆமா ஆமா நீங்க தந்துட்டு போன ஆயிரம் ரூபா தான் ... குடுத்துட்டேன்.
இருங்க ஊர்ல இருந்து சித்தப்பா வந்துருக்காங்க பேசனுமாம்  "
"..."
"மத்தியானமே வந்துட்டாங்க, இருங்க தரேன் "

"இந்தாங்க மாமா பேசுங்க"

"ஹலோ ராசு , நல்லருக்கியாப்பா "
"..."
"மத்யானமே வந்துட்டேன்பா.. நானும் சித்தியும்தான் வந்தோம்"
"..."
"ஆ.. சுபத்ரா மாப்ள எல்லாரும் நல்ல இருக்காங்க"
"..."
"ஆடி மாசம் நம்ம கோவில்ல திருவிழா வருதுல்ல , அப்போ சித்து-க்கு மொட்ட அடிச்சு காது குத்திடலாம்னு இருக்கோம், அதான் உங்கள எல்லாம் கூப்புட்டு போலாம்னு வந்தேன் "
"..."
"ஆடி மாசாம் நாலான் தேதி ராசு "
"..."
"மொத நாளே வந்துடனும்"
"... "
"நீ வர ராத்திரி  ஆகும்னு பூர்ணிமா சொல்லிச்சு , அதான் பேசிட்டு கெளம்பலாம்னு கூப்ட சொன்னேன்"
"...."
"ஆமா ராசு , இப்போ நேரா பவித்ரா வீட்டுக்குத்தான் போகணும் ,அவளையும் கூப்டுட்டு ... அலோ ...அலோ ...ராசு... அலோ ..."

"என்னம்மா பூரணி பேச பேச கட் ஆயிடுச்சு  "

*****

அடுத்த நாள் ...

தினத்தந்தி ...
"அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. 23 பேர் பலி "

சன்  நியூஸ் ....
" செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்திருக்கலாம் என்று கூறப்படுகிறது...."

புதிய தலைமுறை ...
"வாகனத்தை ஓட்டும் பொழுது செல்போன் பேச்சை தவிர்ப்பது ஓட்டுபவர் மட்டுமல்ல , எதிர்  முனையில் பேசுபவரின் பொறுப்பும் கூட"

இவைகளை படிக்கவோ  பார்க்கவோ  முடியாமல் , ராசு குடும்பத்தார் வேலூர் அரசு மருத்துவமனை முன் கூட்டத்தில் கதறிக்கொண்டிருந்தார்.

Friday, June 29, 2012

இலையுதிர் காலம்

இரண்டு நாட்களுக்கு முன்... ஒரு இலையுதிர் காலம் ....

"எனக்கு மனசு விட்டு அழனும் போல இருக்கு ...ஆனா  அவங்க முன்னாடி நானே உடைஞ்சுட்டா அவங்க எங்க போவாங்க ... பாவம் யாமினி ... "

கார்த்திக் - மீடியா துறையில் நன்கு அறியபட்ட திறமையான புடைப்பட கலைஞன்.ஒரு பிரபல கல்லூரியில் ஆசிரியர், ஒரு முன்னணி பத்திரிக்கையின் துணை ஆசிரியர்.

ஜனனி - கார்த்திக் யாமினியோட ஒரே மகள், 7-ஆம் வகுப்பு. கார்த்திக் போலவே போட்டோகிராப்பியில் ரொம்ப ஆர்வம் அவளுக்கு.

ஜனனியின் கனவிலேதான் வாழ்ந்தார்கள் கார்த்திக்கும் யாமினியும் ...

"ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட்டா, என்ன விட பெரிய ஆளா வரணும் அப்படிங்கறதுதான் அவளோட கனவு... இப்போவே என்னோட போட்டோஸ்ல கரெக்ஸன்ஸ்லாம் சொல்வா ... ரொம்ப சுட்டி ... அவள ஒரு மினி ஜீனியஸ்-னு அவங்க மிஸ் கூட போன வாரம்தான் சொன்னாங்க ... "

அவன் மெல்ல அந்த உதிர்ந்த இலைகளின் இடையே ஊர்ந்து நடத்து கொண்டிருந்தான் .மேலே உள்ள மரங்களை பார்த்தான் ...
"கொட்டுற இந்த இலை இன்னும் ஆறு மாசத்துல தழஞ்சுடும் ஆனா ஜனனியோட..."


அவன் எண்ணங்களுக்கு அணை போட்டது அந்த அலைபேசி அழைப்பு ...

"சொல்லுங்க டாக்டர்"

"இதோ பக்கத்துல தான் இருக்கேன் , உடனே வரேன் டாக்டர் "

 *****
சில நாட்களுக்கு முன் ... திருச்செந்தூரில் ...

"அப்பா அப்பா அந்த கண்ணாடி வேணும்பா "
"டேய் அது பொம்ம கண்ணாடிடா "
"பரவால்லப்பா வாங்கி குடுப்பா "
"டேய் வேலா, உனக்கு நான்வேற நல்ல கண்ணாடியா வாங்கி தரேண்டா"
"போறப்போ கேட்டா, சாமி கும்புட்டு வர்றப்போ வாங்கி தரேன்னு சொன்ன இப்ப அப்பறம் வாங்கி தரேன்னு  சொல்ற ..."

"அம்மா அம்மா", என காயத்ரியிடம் ஓடினான்...
தமிழரசனின் நிதி நிலைமை அறிந்த காயத்ரி, "வேணாம் கண்ணா... அந்த கண்ணாடி எல்லாம் போட்டா கண்ணு கேட்டு போய்டும்டா"

வேலன் - தமிழரசன் காயத்ரியின் மூத்த மகன். இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேண்டிய பின் பிறந்ததால் அவனுக்கு வேலன் என பெயர் வைத்து, வருடா வருடம் பள்ளி விடுமுறையில் வருவதை வழக்கமாய் கொண்டவர்கள்.

இவர்கள் வசிப்பது திருநெல்வேலி அருகே , தாழையூத்து. இருவருக்கும் அங்கே உள்ள சிமென்ட் தொழிற்சாலையில் வேலை, வீடும் அருகேதான் . சொந்த ஊர் ஈரோடு அருகில் ... பிழைப்புக்காக இங்கே வந்தவர்கள்.

"சீக்கிரமா நடடா, ராத்திரிக்குள்ள வீடு போய் சேரணும்... பஸ்சு நிக்குது பாரு ...", வேலனை இழுத்து கொண்டு வேகமாய் நடந்தால் காயத்ரி.

*****
இன்று ...

"ரொம்ப நன்றி டாக்டர், இவ்ளோ சீக்கிரம் எல்லாம் நல்லபடியா முடியும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல ", நிம்மதியாய் டாக்டர் அறையிலிருந்து வெளியே  வந்தார்கள் கார்த்திக் யாமினி...
வெளியே கார்த்திக்கின் பாஸ் நின்றுகொண்டிருந்தார் .. மலேசியா சென்றிருந்த அவர் இப்பொழுதுதான் வருகிறார்.
"ஆப்பரேசன் முடிஞ்சுதா கார்த்திக்"
"நல்லபடியா சார் "
"எப்படி கார்த்திக் ஆச்சு "
"ஸ்கூல்ல எதோ டிராமா ப்ராக்டிஸ்... இவளுக்கு பாரினர் வேடம்னு சொல்லி கூலிங்கிளாஸ் குடுத்துருக்காங்க ... போட்டுகிட்டே ஓடிருக்கா... அப்போ கீழே விழுந்தது கண்ணாடி ஒடிஞ்சு பீசஸ்லாம் கண்ண ஸ்பாயில் பண்ணிடுச்சு.. "
"சின்ன பொண்ணு பாவம்"
"கடவுள் புண்ணியத்துல இந்த Eye Transplantation நல்லபடியா முடிஞ்சுடுச்சு"
"கொஞ்ச நேரம் கரண்ட் இல்லைனாவே நம்மாளா முடியல, பாவம் அஞ்சு நாள் ரொம்ப கஷ்ட்டபட்டுருப்பா..."
"ஆமா சார், எங்களுக்கும் இந்த அஞ்சு நாள் இருட்டாதான் இருந்துச்சு"

*****
சில நாட்களுக்கு பின்...

"சொல்லுங்க கார்த்திக்"
"சார், ஜனனிக்கு ஐ டொனேட் பன்னவங்க அட்ரஸ் கெடச்சுடுச்சு. பொதுவா, யாரு தந்தாங்க யாருக்கு போனதுன்னு சொல்லமாட்டாங்க. டாக்டர் என் கிளோஸ் பிரண்டுஅதனால் நான் ரொம்ப கேட்டதால கண்டுபிடிச்சு குடுத்தார். நானும் யாமினியும் நேர்ல போய் அவங்கள பாத்துட்டு வரலாம்னு இருக்கோம், அதான் ரெண்டு நாள் லீவ் கேக்காலம்னு.."
"கண்டிப்பா "
"நாளைக்கு காலைல கெளம்பறோம் சார்"
"ஆமா எங்கன்னு சொன்னீங்க"
"திருநெல்வேலி பக்கத்துல, தாழையூத்து..."

******
தமிழரசன் வீடு, தாழையூத்து ....

"நீங்க நன்றி சொல்ல இவ்ளோ தூரம் வந்ததே பெருசுங்க, பணம் எல்லாம் ஏதும் வேண்டாம்"
"இதுல பத்து லட்சம் இருக்குங்க வெச்சுக்கோங்க..."
"வேணாம்ங்க..அந்த முருகன் குடுத்த புள்ளதான் எங்க வேலன். போன வருஷம் திருச்செந்தூர் கோயிலுக்கு போயிட்டு வரப்போதான் அவனுக்கு அப்படி ஆச்சு...பஸ்ல வரும் போது மூச்சி விட முடியலன்னு சொல்லிட்டே மயங்கி விழுந்தான். 
அப்பறம் நெறைய டெஸ்ட் எடுத்தாங்க, இந்த சிமென்ட் தூள் அவன் நுரையீரல பாதிச்சுடுச்சுன்னு சொன்னாங்க, ஏதேதோ வியாதி பேர் எல்லாம் சொன்னாங்க... ஒண்ணும் புரியல...
காப்பாத்த நெறைய செலவு ஆகும்னாங்க... என் சக்திக்கு முடிஞ்ச வரைக்கும் கடனை எல்லாம் வாங்கி போராடினேங்க... ஆனா முடியல...

உசுர குடுத்து கூட காப்பாத நாங்க ரெடி ஆனா குடுக்கற உசுருக்கு யாரு காசு தர்றா..
உசுர குடுக்கறேன்னா காசு கெடைக்காது, ஆனா உசுர காப்பாத்த விலை வெக்கறாங்க...
உசுர காப்பாத்துற மருந்து இருக்கு, என்ன பண்ணும்னு அறிவு இருக்கு, ஆனா காசில்லதவங்க உசுர காப்பத்தணும்னு யாருக்கும் மனசு இல்லைங்க...

இவன் போனதுக்கு அப்பறம் நெறைய பேர் வந்து சொன்னாங்க, இங்க ப்ரீயா பண்றாங்க அங்க பண்றாங்கன்னு... ஆனா படிக்காதவங்க நானு, அப்போ ஒண்ணும் தெரியல ஒண்ணும் புரியல...
இன்னும் மூணு மாசம்தான் இங்க கான்ட்ராக்ட், அது முடிஞ்சதும் இந்த ஊரே வேணாம்னு சொந்த ஊருக்கே போய்டுவோங்க, மீதி இருக்க இந்த இன்னொரு புள்ள உசுரயாவது காப்பாத்தனுங்க "
"சரிங்க அந்த பயனுக்காவது இது ஆகட்டுங்க..."
இந்த பணம் இருந்திருந்தா எங்க வேலன நாங்க அப்போவே காப்பாத்திருப்போம்.... இப்போ இந்த பணம் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி, எங்க வேலன் ஸ்கூலுக்கு வந்து, கண் தானத்த பத்தி யாரோ சொல்லிருக்காங்க. அப்போதான் அவன் வந்து அடம் பண்ணி அவனோட கண்ண தானம் பண்ண பதிவு பண்ணுனான், எங்களையும் பண்ண வெச்சான்.
நீங்க வேணா ஒண்ணு எங்களுக்காக செய்யுங்க, உங்களுக்கு ரெண்டு கண்ணு கெடச்சதுன்னா நீங்க நாலு கண்ணா குடுக்கலாமே..."


*****
திரும்பும் வழியில் ...

"படிச்சவங்க , நாம நல்லா இருக்கணும்னு நெனைக்கறோம் , படிக்காதவங்க , யாரவது நல்ல இருக்கட்டும்னு நெனைக்கறாங்க , இதான் யாமினி அவங்களுக்கும் நமக்கு வித்தியாசம்"

அவன் சொல்வதை காதில் வாங்காமல் அவள் மனது Eye Bank காண்டாக்ட் நம்பர் யாரிடம் வாங்கலாம் என எண்ணி கொண்டிருந்தது .

*****

Monday, June 25, 2012

உயிர் 2.0

இக்கதையின் முதல் பகுதி இங்கே.

ரயில் நிலைய பிளாட்பாரத்தில்,முருகனும் கணபதியும் , இருவரும் ரயில்வே போலிஸ். 

"முருகா , அது பிக்பாக்கெட் மணி மாதிரியில்ல இருக்கு.."
"ஆமாயா அவனேதான்,சீக்கிரம் வா புடிப்போம் "

இவர்கள் கவனித்ததை பார்த்த மணி, ரயில் பாதையிலேயே  ஓட துவங்கினான் . சிறிது தூரம் ஓடிய  பின் ஒரு ரயில் வருவதை கவனிக்காமல் திடீரென வேறு ஒரு Track-க்கு மாற நினைத்து அந்த ரயிலில் அடிப்பட்டு சிதைந்து போனான்.

துரத்தி வந்த இருவருக்கும்  அதிர்ச்சி, இது வெளிய தெரிந்தால் தாங்கள் துரத்தி வந்துதான் அவன் இறந்தான் என தெரிந்து பிரச்சனை ஆகிவி டும் என பயந்து வேகமாக திரும்பி விட்டனர்.

சிறிது நேரத்தில் தகவல் ரயில்வே போலிஸ் நிலையத்திற்கு வந்தது.

"சார் சீக்ரமா கையெழுத்து போடுங்க, ஒரு கேஸ் வந்துருக்கு போகணும் ... "

தன்  தாயே தன் சாவை தடுத்து நிறுத்தியதாக நினைத்து கலங்கி நின்ற ராம் மீண்டும் நிகழ்காலம் வந்தான்.

அவன் காப்பாற்றிய அந்த குழந்தையின் தாய்  ராமிடம்  நன்றி தெரிவித்து அவன் அட்ரசை வாங்கி கொண்டு அவர்கள் அட்ரசையும் கொடுத்தனர். இவனோ  போலியான ஒரு அட்ரஸ்தான் தந்தான்.

"மனிதனுக்கு உயிர் கொடுக்க மட்டுமே உரிமை இருக்கிறது, தன்  தாய் தந்த  உயிரை எடுக்க உரிமை இல்லை"  என்பதை உணர்ந்தான். இனி வீட்டிற்கு போக மனமில்லை, சாகவும் துணியவில்லை.

அடுத்த நாள் ...

ராம், தான் ஏற்கனவே வேலை செய்த கம்பெனியின் முதலாளியிடம் சென்று நடந்தவை எல்லாம் சொல்லி மீண்டும் தனக்கு வேலை தரும்படி கேட்டான் . ஆனால் இதே ஊர்  வேண்டாம் வேறு ஊரில்  வேலை தருமாறு கேட்டுக்கொண்டான். அங்கே சென்று யாருக்கும் தெரியாமல் வாழப்போவதாக  தெரிவித்தான்.

ஏற்கனவே அந்த முதலாளிக்கு இவன் மேல் நல்ல மதிப்பு இருந்ததால் , ஓசூர் கிளையில் சேருமாறும், அப்படியே புதிதாய் பெங்களூரில் தொடங்கப்போகும் கிளையின் பணிகளையும் கவனிக்கும்படி சொன்னார். சில ஆயிரங்களையும் தந்து, அந்த கிளையின் மேனேஜரிடமும் பேசினார். ராம், இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என கூறினான், அவரும் அவன் நிலை உணர்ந்து சரி என்றார்.

ராம், ஓசூர் வந்த இரண்டாவது நாளில் முதலாளி போன் செய்து அந்த அதிர்ச்சி செய்தியை சொன்னார். அவனால் நம்பவே முடியவில்லை, இருந்தாலும் இப்பொழுது அங்கே வருவது சரி இல்லை என்றும் இன்னும் மூன்று வாரம் கழித்து  வருவதே சிறந்தது என்று கூறினான், அவரும் சரி என்று ஒத்துக்கொண்டார்.

மூன்று வாரம் ஓடியது ....
ராம் அந்த இரவு நேரத்தில் முதலளில்யை சந்தித்தான் ...

"மொதல்ல, நீ எதுக்கு சாகனும்னு முடிவு பண்ணின"
"அன்னைக்கு நான் உயிரை விட்டா கூட கவலை பட யாரும் இல்லைன்னு இருந்த போது, என் உயிரை பத்தி எனக்கு எந்த கவலையும் வரல சார்"
 "இப்போ பாரு என்னென்னவோ நடந்துடுச்சு ... இவ்ளோ கொழப்பம் பாரு"
"ஆனா நான் தெளிவாகிட்டேன் சார்"
"என்ன சொல்ற "

"நீங்க தகவல் சொன்ன அந்த வாரமே நான் இங்க திரும்ப வந்து அந்த ரெயில்வே  போலிஸ் கிட்ட ரகிசயமா உண்மையா எல்லாம் சொல்லி நடந்தத  விசாரிச்சுட்டேன்"
"என்ன நடத்துச்சு?"
" சார்... நான் ட்ரைன்ல இருந்து குதிக்க நெனச்சப்போ ஒருத்தர் என்னோட பார்ச திருடிருக்கார், அவர் போலிஸ் கிட்ட மாட்டாம  இருக்க தப்பிச்சு போகும் போது ட்ரைன்ல அடிப்பட்டு சிதைஞ்சு இறந்துட்டார். அவர் கிட்ட இருந்த பர்ஸ் பாத்துட்டு எங்க வீட்டுக்கு தகவல் சொல்லிருக்காங்க. நானும் SMS  அனுப்பினதால அவங்களும் நம்பிட்டாங்க.
எங்க மாமனார் குடும்ப மானம் போய்டும்னு பணம் குடுத்து  தற்கொல விஷயத்த மறைச்சு, நானும் மைதிலியும் ட்ரைன்ல போகும்போது விழுந்து இறந்துடதா கதைய மாத்திட்டார்."
"அப்போ விவாகரத்து ?"
"அதுவும் பிராடுதான். எங்க என்னோட கடன் தொல்லை எல்லாம் அவங்களுக்கு வந்துடுமோன்னு பயந்து. ஏற்கனவே எனக்கும் அவளுக்கு விவாகரத்து அப்ளை பண்ணியாச்சுன்னு சொல்லிட்டாங்க, அதுக்கான ரெக்கார்ட் எல்லாம் போலியா ரெடி பண்ணிட்டாங்க."
"அவ்வளவு கொடுரமனவங்களா...  "
"அவங்களும் மனுஷங்கதான சார்  "
"இனி"
"சார் இப்போ என் பிரண்டு மூலமா வேற பேர்ல ஒரு லைசன்சு,பாஸ்போர்ட் எல்லாம் வாங்கிட்டேன். எந்த லஞ்சத்த வெச்சு அவங்க நான் செத்துட்டதா செஞ்சாங்களோ, அதே லஞ்சத வெச்சு நான் புதுசா பொறந்துட்டேன், சிவாஜி படத்துல வர்ற ரஜினி மாதிரி சார்."

"வாவ் கிரேட்"
"அந்த பிக் பாக்கட் பேரு மணி , 29 வயசு ஆகுது". 29 வருடங்களுக்கு முன்னாள் இறந்த அவன் தந்தையின் பெயர்.

"இதுல அதிசயம் என்னான்னா.... என்னோட உயிரை காப்பதினது எங்க அம்மான்னா... எனக்காக உயிரை விட்டது எங்கப்பா சார் ...

மனுஷனுக்கு உயிருங்கறது ஒன்னு இல்ல சார் ... ஒவ்வொரு உறவும் ஒரு உயிர். ஒண்ணொண்ணா பிரியுறப்போ ஒரு உயிர் போகுது. கடைசி உறவு போனதுமே அவன் வெறும் பொணம்தான்.

அப்படி ஒரு பொணமாத்தான் நான் சாக போனேன்... ஆனா விதி என்ன சாகவிடல...

இனியும் நான் சாகக்கூடாது, நான் வாழனும்.... ஒரு குழந்தைய தத்தெடுத்து வளரக்க போறேன் சார், புது உறவு ... புது உயிர் ... அந்த உயிருக்ககாவே நான் வாழப்போறேன் சார்"

"You are great Ram ... Sorry.... You are great Jeeva" என்றார் முதலாளி...

Friday, April 27, 2012

சுவடு - நிறைவு பகுதி


[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]
[பகுதி 4  - குளச்சல்]
[பகுதி 5 - வைரவன்]
[பகுதி 6 - கரியான்]
[பகுதி 7 - பைரவி]   


அடுத்த நாள் ...

மகாதேவர் கோவில் முன்பு...

"என்ன விக்ரம் சொல்றீங்க, நான்தான் பைரவியா.... நாம போன ஜென்மம் இங்க இருந்தோமா"

"ஆமா பவானி, நீதான் பைரவி. உங்க அப்பா உன்னை எனக்கு திருமணம் செய்து தர முடிவு பண்ணினார். அது பிடிக்காத உன் மாமன் கரியான் உன்னை அடைய என்ன கொலை பண்ணிட்டான். கொன்னு கடலில் போட்டுட்டான்.

ஆனால் ஊர் முழுக்க தப்பி ஓடிட்டேன்னு பொய்ய  பரப்பிட்டான்.

ஊரே வைரவன பத்தி ... ம்ம்ம்... என்னை  பத்தி தப்பா பேச, அந்த அவமானம் தாங்க முடியாத  உங்கப்பாவும்  என்னை பிரிஞ்ச சோகத்துல நீயும் இதோ இதே கோவில் வாசல்லதான் உங்க உயிரை விட்டுட்டீங்க.

ஆனால் ரெண்டே நாள்ல கரியானும் தற்கொலை பண்ணிகிட்டான். உங்கள பிரிஞ்ச சோகத்துல அவன் செத்துட்டான்னு இந்த ஊர் நம்புச்சு.
ஆனா உன்னை சின்ன வயசுலருந்து காதலிச்சு, கல்யாணம் பண்ண முடியலைன்னும்,  உன் சாவுக்கு அவனே காரணம்னு உறுத்த, அவனும் உயிரை விட்டுட்டான். அந்த உண்மை யாருக்கும் தெரியல. "

"இதெல்லாம் எப்படி தெரிஞ்சது"

"பைரவியோட அப்பா பெரிய மருத்துவர், அவரோட வாழ்க்கை குறிப்பு இருந்த ஓலை சுவடிலதான் இந்த விஷயம் இருந்தது"  

"சரி ஆனா உங்களுக்கு முன் ஜென்ம நினைவு வந்துச்சு... கத்தி உங்க கைக்கே  வந்துச்சு.... அதனால நீங்க வைரவன் சரி... ஆனா நான்தான் பைரவினு எப்படி சொல்றீங்க "
"சொல்லப்போனா ... நீதான்  முதல்ல கடற்கரையில வைரவன் செத்து இருக்கறத பாத்த.... அதாவது என்னோட உருவத்துல... உனக்கு நியாபகம் இருக்கா... உன் கனவுல வந்ததா நீ கூட போன் பண்ணி சொன்னியே.. அன்னிக்கு நைட்டேதான் எனக்கு அந்த வாள் கெடச்சது.

அது மட்டும் இல்ல, நம்ம கல்யணம் என்னைக்கு Fix பண்ணிருக்காங்க?"

"பிப்ரவரி 18"

"தமிழ் தேதி..."

"மாசி 7"

"ம்ம்ம்ம்... இதே மாசி 7 -தான் வைரவனுக்கும்  பைரவிக்கும் கல்யாணம் Fix பண்ணிருக்காங்க. ஆனா போர் வர்றா மாதிரி இருக்குன்னு சொல்லி கரியான் கல்யாணத்த தள்ளி வெக்க சொல்லிட்டான். வைரவனும் சரிதான்னு ஒத்துக்கிட்டான்.

பைரவிக்ககா அவன் வாங்கிருந்தா தாலி கூட அந்த வாளோட சேர்த்து கட்டி வெச்சுருந்தான்."

"ஓ.. ஈஸ் இட் ... ஆனா.... என்னங்க இது தேதி ஒண்ணுன்னா ஆளும் ஒண்ணா  இருக்க முடியுமா "

"ஆளும் ஒண்ணுதான், இத பாரு புரியும்..."

அவள் கைகளில் அந்த ஓலையை கொடுத்தான்...

அதை அவள் படித்தால்... அதில் எழுதியிருந்தது....
"பைரவி - ஊரே அவள் கையால் மருந்து வாங்கினால் நிச்சயமா குணம் அடைவோம் என நம்பியது . 
அதிர்ஷ்டக்காரி, அரிதாய் காணக்கூடிய அதிர்ஷ்ட மச்சத்தை அவள் கை விரல்களிடையே கொண்டிருந்தாள்"

அதே சுவடு அவள் விரல்களில்....

"சரி வந்த வேலை முடிஞ்சது வாங்க போகலாம்  .... " என  இருவரையும் அழைத்தான் ஹரி.

எல்லா உண்மைகளும் அனைவருக்கும் புரிந்தது.

ஆனால் யாருக்குமே தெரியாத உண்மை, வைரவன் பைரவி சாவுக்கு காரணமான  கரியான்தான் இந்த ஹரி என்று !!!

மறுஜென்மத்தில் பலி வாங்க வேண்டும் என்றில்லை பரிகாரமும் செய்யலாம் 

  *******************************************************************

சுவடு - பைரவி (பகுதி 7)

பைரவி

[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]
[பகுதி 4  - குளச்சல்]
[பகுதி 5 - வைரவன்]
[பகுதி 6 - கரியான்]

"டேய் ஹரி என்னடா சொல்ற "
"நெஜமாதாண்டா"
"நடந்தது ஏதும் எனக்கு நியாபகம் இல்ல, அதுக்காக இதெல்லாம் எப்படிடா நம்புறது"
"டேய் விக்ரம், நீ இப்படி ஏதாவது சொல்லுவேன்னு தெரியும், அதான் நான் யாருக்கும் தெரியாம நீ பேசுனத ரெக்கார்ட் பண்ணிட்டேன்."

விக்ரம் அந்த பெரியவரின் குடிலில் பேசிய அனைத்தும் கேட்டு ஆச்சர்யப்பட்டான்.

"இப்பவும் இப்படி எல்லாம் நடக்குதா ஹரி,நம்புற மாதிரியே இல்லையே..."

"நீ வேற, இன்னமும் நம்ம ஊரு போலீஸ்காரங்க கொலைகாரன புடிக்க ஆவி கிட்ட பேசுறாங்க... இங்க இல்ல உலகம் பூர இது நடக்குது ..."

சரி சரி இனி நேரத்த கடத்த வேணாம் , உடனே நாம குளச்சல் போலாம்.
பால நம்பூதியும் சில ஓலை சுவடிகளை எடுத்துகிட்டு அங்க வர்றேன்னு சொல்லிருக்கார்.

"யாருடா இந்த பைரவி? எதுக்காக கரியான் வைரவன கொல்லனும்"
"எல்லாம் அங்க போனா தெரியும்னு நெனைக்கிறேன், உன்ன ஆத்துல குளிச்சிட்டு  கூட்டிட்டு வர சொன்னாரு"

இருவரும் குளச்சல் வந்து சேர்ந்தனர். இவர்கள் வரும் முன்னரே பால நம்பூதிரி, அந்த பெரியவர், மகாதேவர் கோவில் பூசாரி என அனைவரும் அங்கே வந்திருந்தனர்.

ஊரில் உள்ள நிறைய பேர் திரண்டிருந்தனர். 

வைரவன் பற்றி இத்தனை நாள் தவறாக எண்ணியதற்க்காக மக்கள் வருந்தினர். அவன் மீது இருந்த பழியை துடைக்கவே வைரவன் மறு உருவம் கொண்டு வந்ததாய் நம்பினார்.

டீ லானாய், அவருடைய போர் குறிப்பில் வைரவன் என்று யாரும் டச் படைக்கு உதவி செய்யவில்லை என்றே எழுதியிருந்தார்.

அந்த வாள், மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டு, மக்கள் அதனை வணங்கினர்.

வாள், அதற்குரிய இடம் வந்து சேர்ந்து, அதற்கான மரியாதையையும்  பெற்றுகொண்டது.

பால நம்பூதிரி ஓலை சுவடியை  படிக்க ஆரம்பித்தார்....

படிக்க படிக்க விக்ரமின் முகத்தில் சிறிது புன்னகை வந்தது...

அவனுக்கு இப்பொழுது தெளிவாய் எல்லாம் புரிந்திருந்தது...

ஹரிக்கு ஒன்றும் புரியவில்லை...

அதில் ஒரே ஒரு ஓலை மட்டும் விக்ரம் வாங்கிக்கொண்டான்.

படித்து முடித்ததும் கோவிலை விட்டு வெளியே வந்த விக்ரம், அவன் அப்பாவை அழைத்து நடந்தவை அனைத்தையும் சொன்னான்...

அப்படியே பவானியும் அழைத்தான் ...

"சொல்லுங்க விக்ரம்"

மெலிதான புன்னகையுடன் சொன்னான், "பைரவி.....", கையில் அந்த ஓலையுடன்.

[சுவடு - நிறைவு பகுதி ]

Thursday, April 26, 2012

சுவடு - கரியான் (பகுதி 6)

கரியான்

[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]
[பகுதி 4  - குளச்சல்]
[பகுதி 5 - வைரவன்

பால நம்பூதிரி ஒரு கட்டு பேப்பர்களை கொடுத்தார். இது 'டீ லானாய்' (De Lannoy)  எழுதிய போர் பற்றிய குறிப்புகள்.

"அது யாரு "
"அவர்தான் டச் படையின் தலைவர். தோல்வி அடைந்த பிறகு அவரை கைது செய்தனர். ஆனால் பின்னர், சமஸ்தானத்தின் படை தலைவராக பணி புரிந்தார், பத்து ஆண்டு காலம் அவர் இங்கேதான் இருந்தார், அப்பொழுது அவர் போர் பற்றிய புத்தகம் எழுத நினைத்து ஆரம்பித்தார். ஆனால் அவர் அதை முடிக்கவே இல்லை, புத்தகமும் வரவில்லை. அவர் எழுதிய போர் குறிப்புகள்தான் இது.

அவர் கிறித்தவர் என்பதால், அவர் சமஸ்தான மாளிகைக்கு வர அனுமதியில்லை . அவர் உதயகிரியில் இருந்தார். அதனால் இது பெரிதாய் கவனிக்கபடவில்லை. பலர் கை மாறி இப்பொழுது என்னிடம் உள்ளது."

"இதுல என்ன கிடைக்கும்" என்றான் விக்ரம்.

"பாருங்க... " என்றா பால நம்பூதிரி.

அதில் இருந்த தகவலை பார்த்த விக்ரமுக்கும் ஹரிக்கும் மேலும் குழப்பமானது.

"எதுவும் குழம்ப வேண்டாம் , என் கூட வாங்க" என்றார்.

அவர்கள் சென்றது, கோதை ஆற்றில் அமைந்துள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சி. அதன் அருகில் ஒரு இழைகளாலான குடில், ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. உள்ளே இருந்து ஒரு வயதான பெரியவர் வந்தார். பால நம்பூதிரி அவரிடம் எதோ பேசினார்.


பேசிவிட்டு வந்த பால நம்பூதிரி, இவர்களிடம் வந்து, "என்னை முழுசா நம்புங்கள், எதுவும் பேசாமல் வாருங்கள், நம் பல கேள்விகளுக்கு இப்பொழுது விடை கிடைக்கும்" என்றார்.

அந்த ஆற்றின் மறு கரையில்தான் அந்த சிவன் கோவில் (ஸ்ரீ மகாதேவர் ஆலயம்) இருந்தது. 

அனைவரும் உள்ளே சென்றனர். விக்ரம் மட்டும் அந்த கோவிலை பார்த்துக்கொண்டே சென்றான்.

அந்த பெரியவர் விக்ரமுக்கு எதோ குடிக்க கொடுத்தார். அறை  முழுவது புகை போட்டு வைத்தார். அந்த புகை முழுவதும் வெளியேறும் நேரம் சரியாக அவனும் மயங்கினான். அனைவரும் சேர்ந்து அவனை படுக்க வைத்தனர்.

விக்ரமின் காதில் அந்த பெரியவர் எதோ ரொம்ப நேரம் சொல்லிக்கொண்டிருந்தார்.....

"சத்தமா ... சத்தமா.... இன்னும் சத்தமா எல்லோருக்கும் கேக்குற மாதிரி சொல்லு வைரவா .... சொல்லு வைரவா .... "

"போர்ல வென்றதும் நாங்கள் அனைவரும் சந்தோசமாக  தலைநகர் நோக்கி திரும்பினோம். சிறிது தூரம் வந்ததும், கரியான் அவனோட வாள் போர்க்களத்தில்  தவறி விட்டதாகவும் அது இல்லாமல் போனால் அதை விட அவமானம் இல்லை என்றும் என்னிடம் மட்டும் சொல்லி , என்னை மட்டும் தேட அழைத்தான். நானும் அவனுடம் சென்றேன். அங்கே சென்று தேடிக்கொண்டிருக்கும் போது அவன் வாளை எடுத்து என்னை கொன்று விட்டான் .. அவன் வாள் தொலையவில்லை மறைத்து வைத்திருக்கிறான்.. கொன்று என்னையும் கடலில் வீசிவிட்டான்."

"அவன் கொள்ளும் போது ஏதாவது சொன்னானா ... ஏதாவது பேசினானா..."

"...."

"சத்தமா... சத்தமா சொல்லு ... அவன் ஏதாவது சொன்னானா..."

"ஆமா... பைரவி இனி எனக்குதான் என்று சொல்லிக்கொண்டே என்னை குத்தினான்"

[பகுதி 7 - பைரவி]
[சுவடு - நிறைவு பகுதி

சுவடு - வைரவன் (பகுதி 5)

வைரவன்

[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]
[பகுதி 4  - குளச்சல்]


"இப்போ எங்கடா ஹரி போறோம்"
"திருவாங்கூர் சமஸ்தான தலைநகர் பத்மநாபபுரம் "
"அங்க எதுக்கு"
"இந்த போர் பற்றி ஏதாவது தகவல் இருக்கான்னு
அங்க ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர் இருக்காரு, அவர்கிட்ட பேட்டின்னு சொல்லி டயம்  வாங்கிருக்கேன்"  

இருநூறு வருடம்... எனவே மூன்று அல்லது நான்கு தலைமுறை இடைவெளியே.... நிச்சயம் ஏதாவது தகவல் கிடைக்கும் என் நம்பினார்கள்.

பத்மநாபபுரம்.

பல ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய பால நம்பூதிரியை சந்தித்தார்கள்.

பேட்டி என ஆரம்பித்து அவர் எழுதியவைகளை  பற்றி சிறிது நேரம் பேசினர். பின்னர்அவர் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் இவர்கள் அந்த வாளை காண்பித்தனர்.

சற்று நேரம் உற்று பார்த்தார். பின்னர் அந்த அறையில் இருந்த அலமாரில் உள்ள சில புத்தகங்களை படித்துவிட்டு மீண்டும் வந்தார்.

"இது சேபர் வகை வாள். உங்களுக்கு எப்படி கிடைச்சது?'

விக்ரமும் ஹரியும் நடந்தவை எல்லாம் கூறினர்.

ஒரு நிமிடம் எனக்கூறி உள்ளே சென்றார்.

சிறிது நேரம் கழித்து சில புத்தங்களுடன்  வந்தார்.

" இது குளச்சல் போரில் பயன்படுத்திய வாள்தான். ஆனால் அப்பொழுது இந்த வாள் நமது படையில் ஒருவனிடம் மட்டுமே இருந்தது. அந்த போரில் நமது குதிரை படையை வழிநடத்தி சென்ற வைரவன். மிகப்பெரும் துரோகி.  குளச்சல்தான் அவன் சொந்த ஊரும கூட.

நமது படையில் இருந்துகொண்டே, டச் படைக்கு பல தகவல் சொல்லியிருக்கிறான். ஆனால் டச் படை தோற்றதும் எங்கே மாட்டிகொள்வோமோ என எண்ணி தப்பி ஓடிவிட்டான்.

இதோ இந்த சேபர் வாள் கூட ஒரு ஐரோப்பிய தயாரிப்பே.

கடைசி வரை நமது வீரன் போலவே நடித்திருக்கிறான், டச் படையை கைது  செய்து அழைத்து வரும் போது,  அவன் தப்பி ஓடிவிட்டான். இதோ இந்த வரலாற்று புத்தகத்தில் கூட ஒரு குறிப்பு உள்ளது  "

ஆர்வமாய் ஹரி வாங்கி பார்த்தான், ஆனால் விக்ரம் உறைந்து போயிருந்தான், அவன் கண் முன்னே அதே காட்சிகள் ஓடியது ... இப்பொழுது இன்னும் தெளிவாக...

அவன் தீர்க்கமான குரலில் சொன்னான், "அவன கொன்னுட்டான்... கரியான் அவன கொன்னுட்டான்"

"கரியானா?" என்று அதிர்ச்சியானர் பால நம்பூதிரி.

[பகுதி 6 - கரியான்]
[பகுதி 7 - பைரவி]  

சுவடு - குளச்சல் (பகுதி 4)


குளச்சல்

[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]

அவன் கண்ண முன்னே, தான் பார்த்த அதே தூண் இருப்பதை கண்டு வியந்தான்.

அவர்கள் வந்த இடம் : குளச்சல். (Colachel)

குளச்சல், கன்னியாகுமரி மாட்டத்தில் உள்ள கடலை ஒட்டிய  ஒரு  ஊர்.

"இங்கதான் விக்ரம், 1741 - ல  திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் டச் (Dutch) கடற்படைக்கும் சண்டை நடந்தது. நம்ம இந்திய சமஸ்தானம் ஒண்ணு, ஒரு ஐரோப்பிய கடற்ப்படையை  தோற்கடிச்ச முதல் போர் இதுதான். இன்னும் சொல்லபோனா ஒரே போரும் இதுதான்"

"என்னடா சொல்ற "

"ஆமா இங்க தான் டச் படை  தோத்து  சரண்டர் ஆனாங்க"
"அப்படியா"
"ஆமா அதில் இறந்த வீரர்களின் நினைவாதான் இந்த தூண். அது மட்டுமில்ல , இந்த வாள்ல இருக்கிற சங்கு சின்னம்தான் இந்த தூணோட உச்சியிலையும் இருக்கு பார். இதுதான் திருவாங்கூர் சமஸ்தானத்தோட சின்னம்."

இருவரும் ஊரை சுற்றி சுற்றி வந்தனர். ஆனால் உருப்படியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வாளுக்கும் அந்த போருக்கும்  நிச்சயம் சம்பந்தம் உண்டு என புரிந்து கொண்டனர்

"விக்ரம், நாம கேள்விப்பட்ட வரைக்கும் சுனாமில கடைசிய தாக்கப்பட்டது இந்த குளச்சல்தான். இந்த வாள்  இங்க எங்கயோ இருந்துதான், கடல் அலைல அங்க வந்துருக்கணும்"
"அவ்ளோ தூரமா"
" ஏண்டா கடலூர்ல செத்தவன விசாகபட்டினத்துல கண்டு புடிக்கலையா..."
"அதெல்லாம் சரி எனக்கேண்ட அந்த காட்சியெல்லாம் வந்தது, அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், இந்த வாள் ஏன் என் கைல கெடைக்கணும்"
"ம்ம்ம்ம்... உன் போன ஜென்ம நியாபகம்... "
"போடா... நானே கொழம்பி போய்  இருக்கேன்... நீ வேற வெளயாடாத..."
"ஆமாடா.. இருக்கலாம்... Short-term memory loss மாதிரி உனக்கு Very Very Long-term memory gain...", என்று சிரித்தான்.
"அப்படியெல்லாம் கூட இருக்கா... "
"ஹே.. நான் சும்மா சொன்னேன்டா...  "
"அதானே... How is it scientifically possible?...
"டேய்.... எல்லாத்துக்கும் Scientific Reason தேடுறதுக்கு வாழ்க்கை ஒண்ணும் Experiment இல்ல"
"அப்போ என்ன சொல்ல வர்ற ... "
"சொல்ல முடியாதுடா.... நீ பார்த்த காட்சி எல்லாம் உண்மையா நடந்ததாகூட  இருக்கலாம் , இதோ இந்தா தூண மாதிரி"

" டேய்... நான் உன்கிட்ட சொல்லாத ஒண்ணு... நான் செத்து போற மாதிரியும் பாத்தேன்"

[பகுதி 5 - வைரவன்
[பகுதி 6 - கரியான்

Wednesday, April 25, 2012

சுவடு - பயணம் (பகுதி 3)

பயணம்

[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]

கடல் அலைகளும் நினைவலைகளும் அதன் பங்கை முடித்திருந்தன.

"ஹே சாரி லேட்டாதான் SMS பாத்தேன்"
"பரவால்ல பவானி, ஒரு கவரேஜ் விஷயமா  இன்னைக்கு நைட்டே கன்னியாகுமரி போறேன், வர்ற ஒரு வாரம் ஆகும். அதான் நேர்ல பாத்து  சொல்லிட்டு போலாம்னு வர சொன்னேன் "
"என்ன திடீர்னு"
"இல்ல ஒரு சென்சிட்டிவ் கவரேஜ். Important கூட. ஹரி மட்டும்தான் போக வேண்டியது, இப்போ எங்க ரெண்டு பேரும் போக சொல்லிட்டாங்க. சக்சஸ் ஃபுல்லா முடிச்சிட்டா பெரிய ரிவார்ட் கெடைக்கும்"
"ஓ... அப்படியா , ஆள் தி பெஸ்ட்" என கை கொடுத்தாள்.

அப்பொழுதுதான் அவன் அதனை பார்த்தான்....
"இதென்ன விரல் நடுவுல ஒரு மச்சம், இவ்ளோ நாளா  நான் பாக்கலையே ..."

"ஹேய் ஆமா லக்கி மச்சம்... இத பாத்துட்டல்ல,  சக்சஸ்தான்"
"சரி ஹரி வெய்ட் பண்ணுவான் நான் கெளம்பறேன, ஸ்டேஷன் போயிட்டு  கால் பண்றேன்.

முதல் முறையாக பவானியிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்பினான்.

"சாரிடா ஹரி... பவானி பாத்துட்டு வர லேட் ஆகிடுச்சு"
"என்ன சொன்னா"
"நான் எதுமே சொல்லல, ஒரு முக்கியமான கவரேஜ்ன்னு மட்டும் சொல்லிட்டேன்"
"பரவால்லடா, எவ்ளோ நாள் சொன்ன"
"ஒரு வாரம்"
"அவ்ளோ நாள் வேணுமா"
"தெரியல...  அங்க போனா இன்னும் என்னெல்லாம் ஆகுமோ..."
"நாகர்கோயில்ல  என் Friend இருக்கான். போனதும் அவனோட கார் எடுத்துக்கலாம்"
"சரி வேற எதாவது டீட்டெய்ல்ஸ் கெடச்சதா?"
"ம்ம்ம்.... நெறைய...

இந்த வாள்,  சேபர் (Sabre) வகை, இது 18ம் நூற்றாண்டுல இருந்தது. அதனால நேத்து நாம பாத்த விஷயத்துக்கும் இதுக்கும் கண்டிப்பா சம்பந்தம் இருக்கும். உன் கண் முன்னாடி வந்த காட்சிகள் அங்க போனா உண்மையா இருக்கலாம்"

"எல்லாமேவா"
"தெரியல வா போயிதான் பாப்போம்"

விக்ரம், ஹரி அந்த வாள் மூவரும் அன்றிரவு பயணத்தை தொடங்கினர்.

அந்த இரவும் அதே காட்சிகள் அவனுக்குள் ஓடியது... ஆனால் இந்த முறை பவானியின் கைகளில் பார்த்த மச்சமும் ....

[பகுதி 4  - குளச்சல்]
[பகுதி 5 - வைரவன்]  

சுவடு - நினைவலைகள் (பகுதி 2)

நினைவலைகள் 

[பகுதி 1  - கடல் அலைகள் ]

டிசம்பர் 30 , 2004 இரவு பதினோரு மணி

அன்றிரவு விக்ரமின் அலமாரியில்தான் அந்த வாள் தூங்கியது. அவனும் தூங்க ஆரம்பித்தான். ஆழ்ந்த தூக்கத்தில் செல்ல செல்ல அவனுள் அந்த படம் ஓடியது ....

போர்க்களம்... 

போர்க்காட்சி...

குதிரை படை...

வாள்...

சங்கு சின்னம்..

கடற்க்கரை...

இதே காட்சிகள் அவனுள் திரும்பத்திரும்ப வந்தது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்.

"இது கனவா... இல்லை இல்லை... கனவு போலவே இல்லை.... கண் முன்னாடி  படம் மாதிரியே ஓடுதே , நிச்சயமா இது கனவு இல்லை. "

அவசரமாக எழுந்தது அந்த வாளை எடுத்தான், இப்பொழுதும் அதே மின்னல் போன்ற உணர்வு .

"அதேதான்.... அதே  வாள்தான்....  காட்சிகளில் வந்த அதே வாள்தான்"

மிகவும் குழம்பினான்.

அந்த வாளினை தீவிரமாக ஆராய்ந்தான்.

லேப்டாப், கூகிள் என அனைத்து  உதவியும் சேர்த்துக்கொண்டான் .

அந்த வாளில் அவன் கண்ட காட்சிகளில் வந்த சங்கு போன்ற சின்னமும் பொரிக்கப்பட்டிருந்தது. மேலும் அதன் கைப்பிடியில் ஒரு செயின் போன்று  எதோ சுற்றியிருந்தது.

"ஏதோ அறிய பொக்கிஷம்... இத வெச்சு ஒரு எப்பிசோட் பண்ணலாம்னு நெனைச்சா, இதுல வேற எதோ இருக்கும் போல இருக்கே....
பவானிக்கு போன் பண்ணி சொல்லாலாமா... வேணாம் காலைல வந்த  கனவுல அவளே பயந்திருக்கா...  இன்னும் இதெல்லாம் சொன்னா அவ்ளோதான்."

அந்த வாளை  பற்றி ஆராய ஆரம்பித்தான். அன்றிரவு முழுவதும் தூங்கவே  இல்லை .

தன் கண் முன்னே வந்த காட்சிகளை முடிந்தவரை படமாக வரைந்து வைக்க முயன்றான். ஆனால் அவனால் ஒரே ஒரு படம் மட்டும் வரைய முடிந்தது. அது ஒரு தூண், அதன் உச்சியில் ஒரு சங்கு.

விடிந்ததும் ஹரிக்கு போன் செய்து வர சொன்னான், அவனது நீண்ட நாள்  மீடியா நண்பன்.

"என்னடா இவ்ளோ காலைல, எனி ஹாட் நியூஸ்?"
"இதோ பாருடா, நேத்து நைட் பீச்ல கெடச்சது,எங்கிருந்தோ சுனாமில அடிச்சிட்டு வந்துருக்கு" என ஆரம்பித்து தனக்கு நேர்ந்ததெல்லாம் சொன்னான்.

அமைதியாய் கேட்டு கொண்டிருந்த ஹரி அவன் வரைந்து வைத்திருந்த படத்தை பார்த்தான்.

"டேய் விக்ரம், நான் இத எங்கயோ பாத்திருக்கேன்டா. அந்த லப்டாப் இங்க குடு "
"என்ன சொல்ற இது இப்பயும் இருக்கா"
"இருடா..." என் கூறி ஹரி மும்முரமாய் இன்டர்நெட்ல் எதோ தேடினான்.

அவன் கிட்டதட்ட அதே போன்ற படத்தை காட்டினான்.

"இது... இது... இதுதாண்டா பாத்தேன்" மிகவும் அதிசயித்தான்.

அதே தூண்

தான் கண்டது நிஜமாய் இருப்பதை நினைத்து பிரமித்தான்  விக்ரம்.

"நாளைக்கே போறோம் விக்ரம்"

[பகுதி 3  - பயணம் ]
[பகுதி 4  - குளச்சல்]

Tuesday, April 24, 2012

சுவடு - கடல் அலைகள் (பகுதி 1)

கடல் அலைகள் 

டிசம்பர் 30 , 2004    காலை ஏழு மணி

"ஹலோ விக்ரம்"
"சொல்லு பவானி"
"இன்னைக்கு சாயந்தரம் மீட் பண்ணலாமா"
"ம்ம்ம்... ஒக்கே , எதாவது ஸ்பெஷல்?"
"இல்ல இன்னைக்கு ஒரு கனவு... நேர்ல சொல்றனே"
"என்ன ஆச்சு?"
"நேத்து நைட்டு சுனாமி நியூஸ் எல்லாம் பாத்துட்டு அப்படியே தூங்கிட்டேன், கனவுல வெறும் பினங்களா செத்து மிதக்கற மாதிரி வந்தது"
"அது நியூஸோட எபெக்ட். சும்மா கவலைபடாம நீ காலேஜ் கிளம்பு "
"அப்படி இல்ல, அதுல நீங்களும் இருக்கற மாதிரி வந்தது, அதான் ஷாக் ஆகி எழுந்திட்டேன், ஐஞ்சு மணில இருந்து தூக்கமே இல்ல, இப்போதான் நீங்க  முழிச்சிருப்பீங்கன்னு கால் பண்ணினேன்"
"அதெல்லாம் சீரியஸா எடுத்துக்காத, விடிய காலைல கெட்ட கனவு வந்தா நல்லதுன்னு சொல்லுவாங்க"
"எதோ மனசு உருத்தலாவே இருக்கு"
"அத்தைய நல்லா சூடா காபி போட்டு தர சொல்லி குடி, எல்லாம் பறந்துடும்"
"சரி காலேஜ் முடிஞ்சதும் நாம மீட் பண்ணலாம், உங்களுக்கு ஈவினிங் வொர்க் ஏதும் இல்லையே"
"இருக்காது.. இருந்தா நான் SMS பண்றேன் "

பவானி, மெடிக்கல் காலேஜில் கடைசி வருடம் படிக்கிறாள். மிகப்பெரும் மருத்துவராகி அதனை தொண்டாய் செய்ய சிறு வயது முதலே ஆர்வம் கொண்டவள்.

"ஹலோ"
"சொல்லு பவானி"
"எங்க இருக்கீங்க"
"இங்க பீச்ல"
"வாட்....."
"ஆமா ஒரு 'போஸ்ட் சுனாமி' ரிப்போர்ட் தரனும், அதான் இங்க இருக்கேன்."
"நான் காலையிலேயே என்ன சொன்னேன்"
"சுனாமி வந்து ஒரு வாரம் ஆகுது, நீ பயப்படற மாதிரி இங்க ஒண்ணும் ஆகாது. நீ வேணா வாயேன் இங்க"
"மொதல்ல நீங்க அங்கிருந்து கெளம்புங்க"
"இன்னும் ஒரு ஒன் ஹவர், ஆறு மணிக்கு கெளம்பிடுவேன், எங்க வரணும்னு சொல்லு, வரேன்..."
"சரி கெளம்பறப்போ கால் பண்ணுங்க"

 விக்ரம் தனியார் தொலைக்காட்சியில் நியூஸ் ரிப்போர்ட்டர்.

"ஹலோ பவானி, எங்க இருக்க"
"ஒரு பத்து நிமிஷம்.. கூப்புடுறேன்..."

இன்னும் இரண்டு மாதங்களில் விக்ரமுக்கும் பவானிக்கும் திருமணம் நடக்கயிருக்கிறது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

"ஹலோ விக்ரம் எங்க இருக்கீங்க"
"இன்னும் பீச்லதான்"
"அது தெரியும் பீச்ல எங்க... நானும் இங்கதான் இருக்கேன்"
"இங்க எதுக்கு வந்த... சரி நான் காந்தி சிலை பக்கத்துல நிக்கறேன்"
"பைவ் மினிட்ஸ் வரேன்"

இவர்களுக்கு திருமணம் உறுதி  செய்த நாள் முதல் இருவருக்குமான பொருத்தம் சரியாகவே போய்க்கொண்டுருக்கிறது. 

"இங்க எதுக்கு வந்த, நான்தான் வரேன்னு சொன்னேனே"
"இல்ல எதோ காலைல இருந்து பயமாவே இருந்தது, நீங்க பீச்ல இருக்கறது தெரிஞ்சதும் பயம் இன்னும் ஜாஸ்தி ஆகிடுச்சு, அதான் நேர்லயே கெளம்பி வந்துட்டேன்"
"சரி வா டீ சப்ட்டுட்டே பேசலாம்"

இருவரும் நடந்து கொண்டே பேசிக்கொண்டிருந்தனர்.
அவள் சீக்கிரமாக இங்கிருந்து போகலாம் என சொன்னாலும் அவன் மனம் அந்த இடத்தை விட்டு அவ்வளவு சுலபாக வர விடவில்லை.

"ரெண்டு வாரம் முன்னாடி, இங்க என்ன நடக்க போகுதுன்னே தெரியாம சந்தோசமா பல மக்கள் இருந்த இடம்....
போன வாரம், இங்க வந்த யாருமே இப்போ இல்ல.
இதோ இப்போ இந்த வாரம், யாரும் வர்றதுக்கு பயப்படுற இடம்.
பத்து நாள்ல எப்படியெல்லாம் மாறிடுச்சு பாத்தியா"
"ஆமாங்க இயற்கையோட சக்திக்கு முன்னாடி மனித சக்தியெல்லாம் ஒண்ணுமில்லைன்னு நிரூபனம் ஆகிடுச்சு"

அப்பொழுதுதான் தூரத்தில் எதோ மின்னுவதை கவனித்தான் விக்ரம். அவனுக்கு அது என்ன என்று புரிந்தது. வேகமாய் அதனை அருகில் போய் கையில் எடுத்தான்.

மிகப்பெரிய போர் வாள். அதனை கையில் எடுத்ததுமே எதோ மின்னல் அவனுள் பாய்ந்ததை உணர்ந்தான், அதன் பின்னணி பற்றி துளியும் அறியாமல்.


[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]

Sunday, April 22, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி

"மச்சி"
"ம்ம்ம்"
"ஒரே கடுப்பா இருக்குடா"
"ஏன்டா"
"எங்க போனாலும் ஒரே பிரச்சனையா இருக்குடா"
 "என்ன பிரச்சனை"
"எல்லாம் ஒரே லூசுங்களா இருக்குதுங்க"
"யாரு"

"எங்க ஆபிஸ்ல மேனேஜர் இல்ல, அவன் அப்படித்தான் சுத்த சைக்கோவா இருப்பான் போல, கொஞ்சம் நேரம் சும்மா இருந்தா போதும். உடனே வந்துடுவான். இத முடிச்சியா, அத முடிச்சியான்னு நச்சு பன்றாண்டா. இல்லேன்னா இது பண்ணு அது பண்ணுன்னு சொல்லிட்டே இருக்கறாண்டா"
"விடு  மச்சி எல்லா ஆபிசும் அப்படித்தான்"
"ஆமாடா அதனாலத்தான் அவனெல்லாம் உயிரோடவே விட்டு வேச்சுருக்கேன்"
"விடுறா இதெல்லாம் ஒரு பிரச்சனையாடா"

"இல்லடா அங்கதான் அவனோட தொல்லைனா, இங்க வீட்டுக்கு வந்தா, பக்கத்து வீட்டுக்காரன். சுத்த லூசுடா, அவன் வண்டில கண்ணாடி ஒடஞ்சுடுச்சு, அதுக்கு வந்து எங்க அம்மாகிட்ட நான்தான் ஓடச்சேன்னு சொல்றான்"
"அடப்பாவி அவன் ஏன் அப்படி சொல்றான், ஓங்கி ஒரு அப்பு விட வேண்டியதுதான"
"இல்லடா அவன் வயசானவண்டா, பாவம்டா, அவன் பாக்குறப்போ வண்டிகிட்ட நான் நின்னுட்டு இருந்தேனாம்..."
"நெஜாமேவே லூசுதாண்டா, அப்புறம் வேற... "

"அப்பறம் என் கூட காலேஜில படிச்சானே கிருஷ்ணா"
"ஆமா, அவனுக்கு என்ன"
"நம்ம மளிகை கடை அண்ணாச்சிய புடிச்சு கடிச்சு புட்டான், கடிச்சது கூட பரவால்ல, கடிச்சுபுட்டு நேரா எங்க வீட்டுக்கு வந்துட்டான்.

"அடப்பாவி பயலே, உனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது"
"எல்லாம் ஒரு சாபந்தான்டா"
"சாபமா , ஏன்?"
"ஆமாடா... சின்ன வயசுல எனக்கொரு அண்ணன் இருந்தான், அவனுக்கு கொஞ்சம் புத்தி சரியில்ல, அவன எங்கம்மாவும் மாமாவும் ஏர்வாடில கொண்டு போய் விட்டுட்டாங்க, நான் எவ்வளவோ சொன்னேன்... அண்ணன் இங்கயே இருக்கட்டும்னு ஆனா யாரும் கேட்கல, அவன் அங்கயே ரெண்டு வருஷத்துல செத்து போய்ட்டான், அந்த சாபந்தான் என்னைய வெறும் லூசுங்களா சுத்துங்க"

அதே நேரம் :

அவன்  வீட்டு சமையலறையில் இருந்து அவன் அம்மா, "டேய் கிருஷ்ணா, சாப்ட வாடா நேரம் ஆகுது"

அரசு மருத்துவமனை வாசல், போனில் ஒருவர், "ஆமா சார், அவன்தான் காலைலருந்து எந்த வேலையுமே செய்யாம சும்மா செவுத்த பாத்துக்கிட்டேருந்தான் சார், நாலஞ்சு தடவ என்னடான்னு கேட்டேன், கிட்ட இருந்த பாட்டில எடுத்து மண்டைய ஓடச்சுட்டான் சார். போனா போகுது உயிரோட விடறேன்னு சொல்லிட்டு போய்ட்டான் சார்."

ஏர்வாடி, தலைமை மருத்துவர் அறை, "என் தங்கச்சி பையன்தான் சார், பன்னெண்டு வருஷம் முன்னாடி இங்க கொண்டாந்து விட்டோம் சார். ரெண்டு வருஷத்துல சரியாகி கூட்டிட்டு போய்ட்டோம், இப்ப மறுபடி பிரச்சனை பண்றான் சார், அதான் அவன் ரெக்கார்ட் எல்லாம் வாங்கிட்டு வர சொன்னாரு எங்கூரு டாக்ட்டர்"

மளிகை கடை அண்ணாச்சி , "ஆமாய்யா, நேத்து சாயந்திரம் வந்தான். ஒரு கால் மணி நேரம் நம்ம கடை வாசல்ல நின்னு சிரிச்சுகிட்டே இருந்தான். நானும் எதோ போன்ல பேசுறானோன்னு நெனைச்சேன். அப்பறம் என்னாடான்னு கிட்ட போயி பாத்தா என்னைய கடிச்சு வெச்சுட்டு போய்ட்டான். வீட்ல போயி கேட்டா ஒண்ணுமே நடக்காத மாதிரியே பேசுறான்"

அவன் வீட்டு வாசலில், "சரி மச்சி, எங்கம்மா சாப்ட கூபுட்றாங்க, நான் வரேன், நீ கெளம்பு" என சொல்லிக்கொண்டே அருகில் கிடந்த கல்லை எடுத்து, அதுவரை அவன் பேசிக்கொண்டிருந்த கண்ணாடியை உடைத்து விட்டு வேகமாய் உள்ளே சென்றான்.

Wednesday, April 18, 2012

வலைபாயுதே


“டேய் சித்து “
“எஸ் பாஸ்
“என்னடா, இன்னும் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் தரல
“இந்தாங்க “
“என்ன இன்னைக்கு இவ்ளோ சின்னதா இருக்கு  “
“பாருங்க பாஸ்
“என்னடா ரேசிக்னேஷன் லெட்டர் குடுக்கற, யோசிச்சு தான் இந்த முடிவு பண்ணிருக்கியாஏன் திடீர்னு?”


தனது ராஜினமா கடிதம் பார்த்ததும் எமலோகமே அல்லோகலப்படும் என்று எதிர்ப்பார்த்த சித்திரகுப்தனுக்கு, எமன் பெரிதாய் அதிர்ச்சியடையாதது சற்றே ஆச்சர்யமாய் இருந்தது.
சற்று நேர சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சித்து பிடிவாதமாய் இருந்தான் .


“சரிரெண்டு மாசம் நோட்டிஸ் பீரியட் அதுக்குள்ள வேற ஆள் புடிச்சு KT (Knowledge Transfer) குடுத்துடணும்.”
“என்ன பாஸ் இங்க வர்ற நெறைய பேர்ல, யாரையாவது புடிச்சு 
குடுங்க KT குடுத்துட்டு போயிடறேன்
“உனக்கு தெரியாதாஇங்க வர்ற எல்லாரும் ஆயுள் முடிஞ்சவங்க.
ஆயுள் மிச்சம் இருக்கற ஆள்தான் இதுக்கு எலிஜிபில்.
நீ பூலோகம் போயி ஆயுள் மிச்சம் இருக்கற ஆள் கொண்டு வாநீ ஆள் புடிக்க ரெண்டு நாள்தான் டைம்.”
“ஐ ஆன்சைட். ஷார்ட் டெர்ம்தான் இருந்தாலும் பரவல்ல" என மனசுக்குள் எண்ணினான். 
சரி நான் இப்போவே கெளம்புறேன்
ஆல் தி பெஸ்ட்
தேங்க்ஸ் ... கும்தாத்தா... “

மூன்றாம் நொடி சித்திரகுப்தன்  பூலோகம் வந்து சேர்ந்தான்அவன் வந்த இடம் மீண்டும் தமிழகம்.  


பதினேழு வருஷத்துக்கு முன்னாடி இதே ஏப்ரல் மாசம் அந்த புக்க தொலைச்சிட்டு இங்க வந்தது... ம்ம் .. பரவால்ல... வெயில்தான்  இப்போ கொஞ்சம் ஜாஸ்தி. அதோ ஒரு பஸ் போகுது அதுல யாரையாவது புடிச்சிட வேண்டியதுதான்.


பேருந்து ஓட ஓட போய் ஏறினான் .


கண்டக்டர், “யோவ் எரும மாடு மாதிரி வந்து ஏறுற அறிவில்லை...”
"நான் எரும மாடா... மேல வருவல்ல, வா அப்போ எரும மாட விட்டே மிதிக்கவேக்கறேன் " என்று மனதுக்குள்ளேயே திட்டிக்கொண்டிருந்தான்.
“அங்க ஒருத்தன் இருக்கான், அவன் புடிச்சுடுவோம் , அருகில் போய் அமர்ந்தான்.


“தம்பி
பதில் இல்லைகாதில், காது கேளாதோர் கருவி.
“ஓ... பாவம் என நினைத்தான்
இவன கொண்டு போனா எமன் என்ன மிதிப்பார் 
வேறு யார் சிக்குவார் என நோட்டமிட்டான்.
அதற்குள் கண்டக்டர் 'டிக்கெட்' என வந்தார். சித்து கடைசி ஸ்டாப்க்கு டிக்கட் வாங்கினான்.
அருகில் இருந்தவனிடம் கேட்டபோதுகாதில் இருந்த ஹெட்போனை கழற்றி விட்டு டிக்கட் வாங்கிக்கொண்டான்.
“தம்பி உங்களுக்கு காது கேக்குமா 
மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நல்லாவே
“அப்போ இது 
“ஐபாட் “
“என்னது...
“ம்ம்ம்... பாட்டு கேக்குறது “
“ஓ சரி சரி என்று தன் கதையை கூறி, “மேலோகம் வரியா என் கேட்டான். 
அவனோ இரண்டு நொடி சித்துவையே பார்த்துவிட்டு, காதில் மீண்டும் தனது ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஜன்னல் பாக்கம் திரும்பிக்கொண்டான்.
"திமுரா.. இரு..இரு.." என் மனதுக்கும் திட்டம் தீட்டினான்.
"இவன் இறங்கரப்போ கீழ தள்ளி கொன்னுட வேண்டியதுதான்"    


அவன் இறங்கும் போது சித்துவும் பின்னாடியே சென்றான்.
சரியான சமயம் பார்த்து தள்ளி விட்டான்அனால் அதற்குள் பேருந்து  நின்றுவிட்டது, அவன் சும்மா கீழே விழுந்தான்
எழுந்து வந்தவன் சித்து கன்னத்தில் ‘பளார் அறை விட்டு , ஏதோ ஆங்கிலத்தில் திட்டி விட்டு போய்விட்டான்.


சோகமாய் கன்னத்தில் கை வைத்து சித்து நின்றிருந்தபோது, அசால்ட்டை அசத்தல் கெட்-அப்பில் வந்தார், எமதர்மராஜன்.
"பாஸ், நீங்க எங்க இங்க.."
"உன்ன பத்தி தெரியும், நீ இப்படித்தான் பண்ணுவேன்னு, அதான் நானே வந்தேன்.
அவன நீ என்ன MNC கம்பெனிலயா வேலைக்கு கூப்புடுற, ஜாப் டிஸ்க்ரிப்ஷன் எல்லாம் சொல்லிக்கிட்டு... பிளான் போட்டமா ஆள தூக்குனமான்னு போயிட்டே இருக்கணும்"


அப்பொழுது கார்த்திக் தனது புது பைக்கில் இவர்களை கிராஸ் செய்தான்.
எமன் ஒரு நிமிடம் கண் மூடி எதோ யோசித்துவிட்டு..  “சரி, இவன்தான் நம்ம டார்கெட் “ என்று கார்த்திக்கை காட்டினார்.
சித்துவை அருகில் அழைத்து தனது பிளானை சொன்னார்.
“டேய், அந்த ப்ராஜாக்ட் கூட இவனையும் கோர்க்க டிரை பண்ணுவோம்சிக்குனா தூக்கிடுவோம்.”
“Ok  பாஸ்


கார்த்க்கு சிக்னலை நெருங்க நெருங்க, பச்சை ஆரஞ்சாகி சிகப்பாய் மாறியது. இவன் கோட்டை தாண்டாமல் நிறுத்தினான்.
சிக்னல் கௌன்ட்டர் எண் 30-ல் தொடங்கி குறைந்து கொண்டே வந்தது.
அப்பொழுது இரண்டு இளைஞர்கள் புத்தம் புதுசாய் இரண்டு பைக்கில் அருகில் வந்து நின்றனர்.
சிக்னல்  கௌன்ட்டர் இப்பொழுது 20
கார்த்திக்கை பார்த்து நக்கலாய் சிரித்துவிட்டு, இருவர் பைக்கும் சீறி பாய்ந்தது.
சிக்னல் கௌன்ட்டர்  இப்பொழுது 15
கார்த்திக், "நான் மட்டும் நிக்கறதுக்கு என்ன லூசா", பர்ஸ்ட் கியர் மாத்தி அவனும் பறந்தான்.

அடுத்த 15-வது நொடி, அந்த சாலையில் காரும் பேருந்தும் மோத, கார்த்திக்கும் அவன் பைக்கும் அதிலே சிக்கி கொண்டது .
இப்பொழுது விபத்திலே இறந்த 6  பேரில் கார்த்திக்கும் ஒருவன்.

கார்த்திக்கை தூக்கிகொண்டு செல்லும்போது, சித்திரகுப்தன், "தம்பி, பச்சை விழுற வரைக்கும் நின்னுருந்தா நீ தப்பிச்சுருப்ப... 
எங்க வலையி விழுந்துட்டியே..."

“சாலை விதிகளை மதிப்போம், சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “ 

Saturday, April 14, 2012

ச.ரோஜா


"இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்டாஎன ஆரம்பித்தான் அஜய்.
"தெரியலடா யாரும் கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் காணலஎன்றான் கணேஷ்.
"எல்லாம் இவனாலதான்என்று பாபுவை நோக்கி திட்டினான் ராம்.  
"நான் என்ன பண்றது, நாளைக்கு காலைல ஆபிஸ் சீக்கிரம் போகணும். ஹைவேஸ்ல எதோ டேங்கர் லாரி  கவுந்துடுச்சு அதனால டிராபிக் ஜாம்-னு நாகா சொன்னதாலதான இந்த ரூட்ல போலாம்னு சொன்னேன். Its not my fault man", என்றான் பாபு.

அவர்கள் முன்னே பரிதாபமாய் அடிபட்டு நின்றிருந்தது அவர்கள் வந்த i20 கார். பாபு, ரமேஷ், கணேஷ், அஜய் ஆகிய நாலு பேரும்  வந்த கார்தான் அது.

"என்ன ஒரு 80  வந்துருப்பியா" அஜயிடம் கேட்டான் கணேஷ்.  
"இல்லைடா 100 பிளஸ்என்று கெத்தாய் சொன்னான் காரை ஓட்டி வந்த அஜய்.
 "ஏண்டாஇதென்ன ஹைவேவாசிங்கிள் ரோடுதான இந்த ஸ்பீட் வரலாமா", கணேஷ்.
"இத இடிக்கறதுக்கு முன்னாடி சொல்ல வேண்டியதுதான, அப்பெல்லாம் கம்முனுதான வந்த" , அஜய்.
"எப்படிடா இப்படி கொண்டுவந்து இடிச்சவண்டி உன் Control-ல இல்லயா", என்றான் ராம்.
"அவனே Control-ல இல்ல, அப்பறம் எங்க வண்டி இருக்கும்" சற்றே கோவமாய் சொன்னான் கணேஷ்.

பெங்களூரில் வேலை செய்யும் இந்த நால்வரும்சென்னையில் நடந்த அவர்கள் கல்லூரி Get together முடித்தி விட்டு திரும்பும் போதுதான் இது நடந்தது. அவர்களுக்கு முன்னே கிளம்பிய நாகாதான், ரோடு ப்ளாக் என்பதை கூறினான். காலையில் கிளம்பலாம் என முடிவு செய்யும் நிலையில்தான் பாபு குப்பம் வழியாக சென்றால் பிரச்சனையை இல்லை என்றான்.

"சரி சரி முடிஞ்சது முடிஞ்சு போச்சுஇதுக்கு போய் ஏன்டா இப்படி..." என்று ராம் சமாதானம் செய்ய வரும் போது தூரத்தில் ஒரு  பெண்ணின் அழும் குரல் கேட்டது அவர்களுக்கு.

அஜய் முகம் லேசாக மாறியது .

"டேய் எவனோ வண்டில போய்ட்டுருந்தாண்டா அவன லேசா தட்டிட்டேன்அனேகமா அவுட்டுன்னு நெனைக்கறேன், வாங்கடா போயி பாக்கலாம்..."   என்றான் அஜய்.

ஓடி போய் பார்த்தார்கள்....

"அப்பா அப்பா " என அழுது கொண்டிருந்தாள் ரோஜா.

ரோஜா, அந்த மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றவள். அவள் தந்தை, சதாசிவம், ஓட்டல் சமையல்காரர். மனைவி இறந்த பின், தன் ஒரே மகளை மருத்துவர் ஆக்க வேண்டும் என்பதே அவர் கனவு.

"என்ன ஆச்சுமா " என்றனர் ...
"எங்கப்பா சார்... மெடிக்கல் காலேஜில சீட் வாங்கிட்டு  வந்துக்கிட்டு இருந்தோம் சார்.. ஒரு காரு இடிச்சுட்டு போய்டுச்சு சார்... ரொம்ப சந்தோசமா பேசிகிட்டு வந்தாரு சார்..."
சதாசிவம்தலையில் ரத்தம் வலிய எதோ முனகினார், இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ரோஜாவின் அழுகை மட்டும் கேட்டது.

அதற்குள் சற்றே கூட்டம் கூடியதுஅனால் யாரும் உதவவில்லை
இவர்களுக்கு நடந்தவை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது.

அஜய் வேகமாக வரும்போது ரோஜாவும் அவள் அப்பாவும் வந்த டி.வி.எஸ்   வண்டியை இடித்து விட்டான்அதனால் அஜய் தடுமாறி மரத்தில் இவர்கள் வந்த காரை மோதிவிட்டான். நால்வரும் கொஞ்சம் போதையில் இருந்ததால் இப்போதுதான் புரிந்தது.

கூட்டம் இப்பொழுது கொஞ்சம் பெரிதாய் கூடியது,னால் அமைதியாகே இருந்ததுஆம்புலன்ஸ் கூட அமைதியாகவே வந்தது.

ரோஜா சொன்னாள், "விதி சார்எங்கப்பாக்கு என்னை சின்ன வயசுல இருந்து டாக்டராக்கனும்னு கனவு. இப்போதான் மெடிகல் காலேஜில அட்மிஷன் பண்ணிட்டு அப்படியே கோவிலுக்கு போய் அந்த லெட்டர வெச்சு சாமி கும்புட்டு வரோம் " என்று கூறிக்கொண்டே பெரிதாய் அழுதாள்...

"இனிமே இவரு யார படிக்க வெப்பாரு ...  அதுக்குள்ள இப்படி நான் செத்துபோயிட்டனே அப்பா .... ", என்று குமுறினாள்.    

புதருக்கு அருகே அவளின் பிணம் கிடந்தது. போலிஸ் இன்ஸ்பெக்டர், காருக்குள் இருந்த நான்கு  சடலங்களையும் பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.

நால்வரும் அவளுக்காக கண்ணீர் வடித்தனர், ஆனால் கண்களில் நீர் வரவில்லை.
ஐவரும்  ஆவியாய் மேலே சென்று கொண்டிருந்தனர்.

அந்த அப்பாவி அப்பாவின் கனவும் ஆவியாகி போனது ...

"எந்தவொரு விபத்தும் விதி அல்ல